என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidnap case"

    • ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
    • இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.

    அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அந்த அதிகாரி கூறியபடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட் டார்.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

    இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார்.

    இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணை நடைபெறுகிறது.

    • சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

    பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்தாரா இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை.

    பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?

    தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், காவல்துறையே அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது. ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா?

    காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா? உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளதா? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.

    பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் முதலமைச்சர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. 

    • குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
    • ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.

    அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

    அந்த அதிகாரி கூறியபடி இன்று காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது.

    இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.

    காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கடுமையாக கண்டித்த நீதிபதியின் உத்தரவின் பேரியிலேயே கைது செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.

    இந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் வழக்கில் சிக்கி இருக்கிறார். ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அவர். நாமக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.

    மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோதும் ஒரு பிரச்சனையில் சிக்கி அதில் இருந்து விடுபட்டு வந்தார். தற்போது ஜெயராம் பணியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ்.
    • ஏ.டி.ஜி.பி.யை சந்திக்க மகேஸ்வரி உதவி இருக்கிறார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

    பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

    மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் கொடைக்கானலில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது. தன்னை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என அறிமுகம் செய்து கொண்டு கருங்காலி மாலைகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.

    இதனால் பல அதிகாரிகள், வி.ஐ.பி.க்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் புரோக்கராக செயல்படத் தொடங்கினார். இவருக்கும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு ஆலோசனை பெற்று வந்துள்ளார். அதன் பேரிலேயே தேனியைச் சேர்ந்த வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மகேஸ்வரியை அணுகியுள்ளார். தற்போது 17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் மகேஸ்வரி கைது செய்யப்பட்டு திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வருசநாடு அடுத்துள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை வந்து குறிகேட்டு செல்வது வழக்கம். இங்குள்ள பூசாரி கார்மேகத்துக்கு இதன் மூலம் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. கார்மேகத்தின் நெருங்கிய நண்பராக வனராஜ் இருந்துள்ளார்.

    இதனால் தனது மகள் கடத்தப்பட்ட விபரம் அறிந்ததும் அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து கார்மேகம் பூசாரியிடம் கேட்டுள்ளார். அதன் பின் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஜெயராமன் மூலம் மீட்க உதவி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது வனராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதனால் கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காதல் திருமணம் செய்த விஜயஸ்ரீ தற்போது நடக்கும் பிரச்சினையை பார்த்து அதிர்ச்சியடைந்து இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் தனது காதலை பெற்றோரிடம் அவர் தெரிவித்தபோது சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறியதும், எப்படியாவது அவரை அழைத்து வர வேண்டும் எனவும் நினைத்துள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டில் விஜயஸ்ரீ மற்றும் அவரது காதல் கணவர் தனுஷ் உறுதியாக உள்ளதால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தனது தந்தை வனராஜ் மூலம்தான் இத்தனை பிரச்சினை உள்ளது என்றும், தங்களை நிம்மதியாக வாழ விடுமாறும் உறவினர்களுக்கு செல்போனில் விஜயஸ்ரீ உருக்கமாக பேசியுள்ளார்.

    • பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர்.
    • ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி, 'இந்த கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யை குற்றவாளியாக சேர்த்து விட்டீர்களா?. ஏன் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக போலீஸ் துறை செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் தரப்பில், பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தினால்தான் கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு குறித்து தெரிய வரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜராகி இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றார். இதை ஏற்காத நீதிபதி, 'சிறுவன் கடத்தல் வழக்கில் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 2 போலீஸ் டிரைவர்கள் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளனர். எனவே, கூடுதல் டி.ஜி.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எம்.எல்.ஏ.வை அரசு நியமிப்பது இல்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

    ஆனால், பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர். அதனால், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும். இதன்மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்? என்ற தகவல் பொது ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

    ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • வட மாநிலப் பெண் ஒருவர் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

    பல்லடம் ூ

    மேற்கு வங்க மாநில த்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(வயது35). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையி ல்லாமல் கஷ்டப்படு வதாகவும் , தற்போது மிகவும்சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச்சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஷாஜி மண்டல் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ. 10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர்.

    பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம். மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம். கார்டை பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த ஜெயகுமார் மகன் பாலசுப்பிரமணியன் (18), நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மோகன் மகன் கிளிண்டன் (23) ஆகிய 2பேர் மதுரை மாவட்டம் திருப்புவனம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடை ந்தனர். அவர்களை நீதிபதி காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து 2பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய மேலும் 2பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×