என் மலர்
நீங்கள் தேடியது "பூவை ஜெகன்மூர்த்தி"
- முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில் இணக்கமான சூழல்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் காரணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, காதல் திருமணம் விவகாரத்தில், கட்டப்பஞ்சாயத்து செய்து சிறுவனைக் கடத்திய விவகாரத்தில், ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமினை உறுதி செய்து, அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது .
திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில், பிரச்னைகள் மறைந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
- பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 27-ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.
- முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
- பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளதால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை.
- ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை. எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை.
- தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழாவில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். இதனால் என்மீது, தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக, சம்பந்தமே இல்லாமல், என்னை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஐகோர்ட்டு சில கருத்துக்களை சொல்லி உள்ளது. கோர்ட்டுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.
ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை. நான் என்ன தீவிரவாதியா? பயங்கரவாதியா? எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனான என்னிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இது போன்ற நெருக்கடி கொடுத்தால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அவர்கள் கூட்டணிக்கு வந்து விடுவேன் என்ற எண்ணமா? எப்போது இருந்தாலும், நியாயம், உண்மை வெளிப்படும்.
நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்தாரா இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை.
பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?
தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், காவல்துறையே அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது. ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா?
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா? உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளதா? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.
பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் முதலமைச்சர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
- குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
- ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
அந்த அதிகாரி கூறியபடி இன்று காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது.
இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கடுமையாக கண்டித்த நீதிபதியின் உத்தரவின் பேரியிலேயே கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் வழக்கில் சிக்கி இருக்கிறார். ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
கர்நாடக மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அவர். நாமக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோதும் ஒரு பிரச்சனையில் சிக்கி அதில் இருந்து விடுபட்டு வந்தார். தற்போது ஜெயராம் பணியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார்.
- ஐகோர்ட்டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் கார ணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ந்தேதி இரவு சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்த ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்றபோது ஆதரவாளர்கள் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும், போலீசார் விசாரணைக்கு சென்றபோது ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணைக்கு செல்லும்போது கூட்டமாக ஆட்களை திரட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் தனியாகவே செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்று பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. இன்று காலை 10 மணி அளவில் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆதரவாளர்கள் யாருமின்றி தனி ஆளாகவே பூவை ஜெகன்மூர்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். காதல் விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் உங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த மாதிர யான உதவிகளை கேட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார். பூந்தமல்லி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தான் களாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று காதல் ஜோடியை வீடு புகுந்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படியே கடந்த 6-ந்தேதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் காதல் ஜோடி அங்கு இல்லாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி உள்ளனர்.
அதுவே இப்போது பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படி காதல் விவகாரத்தில் அரங்கேற்றப்பட்ட கடத்தல் பின்னணி பற்றிய முழுமையான தகவல்களையும் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் இருவரும் போனில் பேசிய உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணை என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையிலான போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் முடிவிலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ஜெகன்மூர்த்தியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் சிறுவன் கடத்தல் வழக்கில் அவரது பங்கு என்ன? எப்படி திட்டம் தீட்டப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதனை மையமாக வைத்தே முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர்.
- ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி, 'இந்த கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யை குற்றவாளியாக சேர்த்து விட்டீர்களா?. ஏன் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக போலீஸ் துறை செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் தரப்பில், பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தினால்தான் கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு குறித்து தெரிய வரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கோர்ட்டில் ஆஜராகி இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றார். இதை ஏற்காத நீதிபதி, 'சிறுவன் கடத்தல் வழக்கில் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 2 போலீஸ் டிரைவர்கள் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளனர். எனவே, கூடுதல் டி.ஜி.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எம்.எல்.ஏ.வை அரசு நியமிப்பது இல்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
ஆனால், பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர். அதனால், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும். இதன்மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்? என்ற தகவல் பொது ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது.
- இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
அந்த விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்.
சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர். அதனை மறந்து கட்டபஞ்சாயத்து செய்வதா?. விசாரணை நடத்த வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?
நீதிமன்றம் நினைத்திருத்திருந்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்.
MLA மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.
போலீசார் விசாரணைக்கு எம்எல்ஏ ஒத்துழைக்காவிட்டால் சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்.
விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என கூறிய நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
- ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சென்னை:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் காரில் கடத்தியது. பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றனர். இந்த கடத்தலில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.






