என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மூர்த்தி- நீதிபதிகள் சரமாரி கேள்வி
    X

    சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மூர்த்தி- நீதிபதிகள் சரமாரி கேள்வி

    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது.
    • இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

    அந்த விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும், உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்.

    சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர். அதனை மறந்து கட்டபஞ்சாயத்து செய்வதா?. விசாரணை நடத்த வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?

    நீதிமன்றம் நினைத்திருத்திருந்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்.

    MLA மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

    பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.

    போலீசார் விசாரணைக்கு எம்எல்ஏ ஒத்துழைக்காவிட்டால் சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்.

    விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என கூறிய நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×