என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கான்ஸ்டபிள்"

    • கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
    • அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.

    கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம்.களுக்குப் பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்த கும்பல், துப்பாக்கி முனையில் 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது.

    இந்த வழக்கை துப்பு துலக்கிய பெங்களூரு காவல்துறை ஐதராபாத்தில் வைத்து, கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.

    கைதுசெய்யப்பட்டவர்களில் அன்னப்பா நாயக், பெங்களூரு கிழக்கு கோவிந்தபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். சேவியர் CMS Info Systems நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.

    மூன்றாவது நபர் கோபி பிரசாத், கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தின் வழித்தடத்தை டிராக் செய்வதில் பங்காற்றியவர் ஆவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    தான் ஒரு போலீஸ் என்பதால் போலீசிடம் சிக்காமல் கொள்ளையடிப்பதற்கான நுணுக்கங்களை அவரே தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.

    சிக்கியது எப்படி?

    கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.

    அன்னப்பா நாயக் அங்கு பணியில் இல்லாதபோதும், அவர் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்துள்ளார்.

    அங்குப் பணியில் இருந்த தலைமை காவலரை அணுகிய அவர், கொள்ளை குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

    கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று குறிப்பாகக் கேட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் காட்டி அது உண்மையானதா என்றும் கேட்டுள்ளார்.

    அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல்தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.

    இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இங்கு வந்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் என்று தலைமை காவலர் சந்தேகம் அடைந்தார். இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார்.

    தீவிர விசாரணையில், கொள்ளையில் தனக்கு இருந்த பங்கை அன்னப்பா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேவியருடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவரது செல்போன் அழைப்புகள் உறுதிப்படுத்தின.

    தற்போது, அன்னப்பா நாயக் மற்றும் இரு குற்றவாளிகள் பத்து நாட்கள் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    • 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
    • ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

    ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

    அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

    • குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
    • பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் போலீஸ் கூற்றுப்படி, ராயபோலில் இருந்து மன்னேகுடா நோக்கி இன்று காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணி மீது கார் ஒன்று  வேண்டுமென்றே மோதியுள்ளது.

    ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நாகமணியை காரில் இருந்து இறங்கிய அண்ணன் பரமேஷ் கத்தியால்  அவரது கழுத்து மற்றும் பிற இடங்களில் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை கைப்பற்றினர். நாகமணி காதல் திருமணத்தால் கோபமடைந்த அவரது  அண்ணன் பரமேஷ் இந்த ஆணவக் கொலையை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    வழக்குப்பதிவு விசாரணை நடத்திவரும் போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். கொலைக்கு சொத்து தகராறு காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காததால்தான் நாகமணி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் தெரிவித்துள்ளார். 

    • வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
    • செலக்ஷன் கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பினார்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் தனது சக ஊழியரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வடக்கு காஷ்மீரின் சோபோரில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துணைப் பயிற்சி மைய (எஸ்டிசி) தல்வாராவுக்கு இரண்டு காவலர்கள், மற்றொரு சக ஊழியருடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    காலை 6:30 மணியளவில் உதம்பூரின் ரெஹெம்பல் பகுதியில் உள்ள காளி மாதா கோவிலுக்கு அருகே போலீஸ் வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாக்குவாதத்தில் டிரைவரை தலைமை கான்ஸ்டபிள் தனது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தனர்.

    வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான தேர்வு செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    • நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
    • ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

     உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஆயுதப்படை கான்ஸ்டபிள் (PAC) ஒருவர் பணிக்கு தாமதமாக வந்த்தற்கு கொடுத்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மீரட்டில் பிப்ரவரி 17 அன்று பணியில் அலட்சியம் காட்டியதற்காக PAC கான்ஸ்டபிளுக்கு பட்டாலியன் பொறுப்பாளர் தல்நாயக் மதுசூதன் சர்மா ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

    பிப்ரவரி 16 அன்று காலை கான்ஸ்டபிள் தாமதமாக வந்ததாகவும், அடிக்கடி யூனிட் செயல்பாடுகளைத் தவறவிட்டதாகவும், இது கடுமையான ஒழுக்க மீறல் என்றும் நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நோட்டீஸுக்கு பதில் கடிதம் எழுதிய கான்ஸ்டபிள், "என் மனைவி என் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் என் இரத்தத்தைக் குடிக்க முயற்சிப்பது போல் தினமும் இரவு கனவு வருகிறது. எனவே இரவில் தூங்க முடியவில்லை"

    இதனால் வேலைக்கு வர தாமதமாகிவிட்டதாக தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், அவரது தாயார் நரம்பு கோளாறால் அவதிப்படுவதாகவும், இது அவரது துயரத்தை அதிகப்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடிதத்தின் முடிவில் உணர்ச்சிவசப்பட்ட கான்ஸ்டபிள், நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.

    எனவே ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கடிதம் சமூக ஊடக தளங்களில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.  

    • சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார்.
    • தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் மகளிர் தின நிகழ்ச்சியின் பெயரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஷ்டிர போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த மார்ச் 8 ஆம் தேதி சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பட்டோடாவில் போலீஸ் கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் (35 வயது) அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

    அழைப்பை ஏற்று அங்கு வந்த பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கான்ஸ்டபிளை அன்றைய தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மார்ச் 12 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அறிமுகமாகி கான்ஸ்டபிள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

    ×