search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female police"

    • 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்:

    ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.

    தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    • தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
    • பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    தெலுங்கானா மாநிலம், பேகம்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக சுனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு லிங்கம் பள்ளியில் இருந்து பலக்கணுமா செல்லும் எம்.எம்.டி. எஸ் ரெயில் பேகம் பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    பயணிகள் ஏறிய பின்னர் சிறிது நேரம் கழித்து ரெயில் மீண்டும் மெதுவாக கிளம்பியது. தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.

    அப்போது சரஸ்வதியின் கால் தவறி ரெயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையே சிக்கியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சுனிதா இதனைக் கண்டு திடுக்கிட்டார். ஓடி சென்று துரிதமாக செயல்பட்டு சரஸ்வதியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனை கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் சரஸ்வதி காலில் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

    சரஸ்வதியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.

    போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.

    இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

    நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.

    இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார்.
    • மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாணாம்பட்டு பகுதி நடராஜன் மனைவி மணிமேகலை (வயது 39). பெண் போலீஸ். இவரும் நடராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடராஜன் தனியாரில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. பெண் போலீஸ் மணிமேகலை சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்தது. அதனால் நடராஜன் குழந்தைகளை அவருடன் அழைத்து கொண்டு வந்து விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

    கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென எண்ணிய மணிமேகலை அலுவலகத்தில் பணிமாறுதல் கோரியதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் துறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை வீட்டிற்க்கு சென்ற மணிமேகலை, தன்னுடைய உறவினர் திருமணத்திற்க்கு வருமாறு நடராஜனை அழைத்துள்ளார். இதில் இவ்விருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் போலீஸ் மணிமேகலை இரவு 2 மணிக்கு மேல் வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு முழித்த நடராஜன், மணிமேகலையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இவருக்கு 90 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் பெண் போலீஸ் மேல்சிகி ச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
    • செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார்.

    விழுப்புரம் :-

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்து வருவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.கன்னத்தில் அறைஇதனை தொடர்ந்து மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸாண்டர் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது மணி என்பவரின் மனைவி செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் பெண் காவலர் அம்முவை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதுபற்றி விசாரணை நடத்த ப்பட்டதில் விசாரி த்ததில் அந்த பெண்ணுக்கு சாமி வந்தால் எதிரில் இருப்ப வர்களை அடிப்பார்களாம். நேற்று அதே போல் சாமி வந்ததால் அடித்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செந்தாமரை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். 

    • போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது.
    • பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது.

    பல்லடம் : 

    பல்லடம் பகுதியில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர்.

    ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்து அறிவிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில், போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் லாரியை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக செல்லக்கூடாது மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறித்தினார். ஆனால்அந்த லாரி டிரைவர் அவர் மீது மோதுவது போல் லாரியை ஓட்டி நிற்காமல் சென்றுள்ளார்.

    இதையடுத்து செல்போன் மூலம் அருகிலுள்ள நால்ரோடு பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசாரிடம், அந்தப் பெண் போலீஸ், லாரி அத்துமீறி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கி, ஏன் மாற்றுப்பாதையில் செல்லாமல், பெண் போலீஸ் மீது மோதுவது போல் லாரியை ஓட்டினாய் எனக் கேட்டுள்ளார். இதற்கு அந்த டிரைவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை லாரியிலிருந்து இறங்கும்படி போலீஸ்காரர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த டிரைவர் இறங்க மறுத்ததாகவும், அவரது கையைப் பிடித்து போலீசார்இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை, அந்த வழியாக சென்ற பயணி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    • ரஞ்சித் குமார் என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
    • மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகள் சவிதா இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (32) என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்ப டுகிறது. சவிதா என்பவர் ரஞ்சித்குமாருக்கு ஏற்கனவே ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் ஆக மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று துருகம் சாலையில் பஞ்சர் கடை அருகே சவிதா வந்து கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித்குமார் வழிமறித்து ரூ.30 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற ப்படுகிறது. இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.
    • அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.

    ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த பகுதி வழியாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராட்சத கொள்கலனை வேடிக்கை பார்க்க சென்றனர்.

    அங்கு பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசாரின் ஜீப் அருகே இருவரும் நின்றிருந்தனர். அப்போது ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.

    அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.

    மேலும் திருடிய செல்போனை தந்துவிடும்படியும் கூறி மிரட்டினார். இதை கண்டு மிரண்டு போன ஜெயச்சந்திரனின் மகள் கதறி அழுதார். அப்போது ஜீப்பில் இருந்த இன்னொரு பெண் போலீஸ் , ரெஜிதா தவறவிட்ட செல்போன், ஜீப்பின் சீட்டுக்கு அடியில் கிடந்ததாக கூறி அதனை அவரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து ஜெயச்சந்திரனையும், அவரது மகளையும் ரெஜிதா விடுவித்தார். இந்த சம்பவங்களை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    சாலையில் வேடிக்கை பார்க்க வந்த தந்தையைம், மகளையும் பெண் போலீசார் திருட்டு பட்டம் கட்டியதாக கூறி அதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தனக்கு திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்திய பெண் போலீஸ் ரெஜிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயச்சந்திரன் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு, பெண் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

    இதனை பெண் போலீஸ் ரெஜிதாவிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் எனவும் கூறியது. இதையடுத்து கேரள அரசு சிறுமிக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டு தொகையான ரூ.1.50 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.1.75 லட்சத்தை பெண் போலீஸ் ரெஜிதா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எலி மருந்து சாப்பிட்ட போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயதேவன் (வயது 30). கடந்த 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ்காரர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

    இதனிடையே இருவரும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். செண்பகம் திருவெறும்பூர் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அடுத்த மாதம் 17-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர். இதனிடையே கடந்த 17-ந்தேதி ஜெயதேவன் நவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே அவர் வயிற்றுப்புண் மற்றும் குடல் வால்வு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் விடுப்பு எடுத்து சிகிச்சை மேற்கொண்டார்.

    கடந்த 28-ந்தேதி வயிற்று வலி அதிகமாகவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காதலன் வி‌ஷம் அருந்திய தகவல் கிடைத்ததும் திருச்சிக்கு விரைந்து வந்த செண்பகம், ஜெயதேவனை உடனிருந்து கவனித்து கொண்டார். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர், இருவருக்கும் காதல் மலர்ந்த இடமான ராமேஸ்வரத்திற்கு தனியாக சென்றார். ராமேஸ்வரம் கோவில் அருகே சென்றதும் அவரும் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். மயங்கி கிடந்த செண்பகத்தை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    ஜெயதேவன் தற்கொலை முயற்சி குறித்து திருச்சி துவாக்குடி போலீசாரும், செண்பகம் தற்கொலை முயற்சி குறித்து ராமேஸ்வரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். #NewYear2019
    சென்னை:

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    2018-ம் ஆண்டு விடைபெறுகிறது. 2019 புத்தாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை நகரில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம்-பாட்டத்தோடு இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்பது குறித்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    * புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணி வரை கொண்டாடலாம்.

    * 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

    * ஆனால் மது பார்கள் அந்தந்த ஓட்டல்கள் லைசென்சு பெறும்போது, என்னென்ன நேரம் ஒதுக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைத்திருக்கலாம்.

    * சில ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்டல்களில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரையோடு மது பார்களை மூடிவிட வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனிப்பதற்காக பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

    * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறி நடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக்கூடாது.

    * வாடிக்கையாளர்களின் கார்களை சோதிக்க வேண்டும்.

    * வாடிக்கையாளர்களின் உடைமைகளையும் சோதிக்க வேண்டும்.

    * ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. உரிய டிரைவர்களை ஏற்பாடு செய்து போதையில் இருப்பவர்களை கார்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    * புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடிவிட வேண்டும். நீச்சல்குளத்தின் மேல் பகுதியிலோ அல்லது அருகிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான மேடை எதையும் அமைக்கக்கூடாது.

    * நீச்சல் குளங்களை மூட வசதியில்லாதபட்சத்தில், அருகில் காவலாளிகளை காவலுக்கு நிறுத்த வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களின் வாசல்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மொத்தத்தில் விபத்து இல்லாமல், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியாக புத்தாண்டு விழாவை கொண்டாட ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் அறிவுரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். #NewYear2019
    வேலூர் ஜெயிலில் பணியாற்றி வந்த பெண் காவலாளி செல்போன் விவகாரத்தில் சிக்கியிருப்பதை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கும் உதவினாரா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் கு‌ஷன் படுக்கை வசதியுடன் டி.வி., ரேடியோ, செல்போன்கள் என சுக போகமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புழல் ஜெயிலை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஆண்கள் ஜெயிலில் தான் கைதிகளிடம் செல்போன், கஞ்சா சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கும். சமீப காலமாக பெண்கள் ஜெயிலில் செல்போன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

    இங்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி (55). இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை பணிக்கு வந்த திலகா, காய்கறிகளை வாங்கி கொண்டு கேன்டீனுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்து மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டது.

    2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகாவை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. செல்போன் வைபரட் மோடில் வைத்துள்ளார். அழைப்பு வந்ததால் திலகா சிக்கி கொண்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து திலகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது அம்பலமாகியுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஜெயிலில் செல்போன் வைத்திருந்ததாக ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார்.

    அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். மேலும் நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? எனவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திலகவதியின் போனில் இருந்த சிம்கார்டில் உள்ள எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறைத்துறை விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகாவை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புழல் ஜெயிலை போல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலிலும் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிரடியாக ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
    ×