என் மலர்
நீங்கள் தேடியது "Female Police"
- போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
- முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்
நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.
காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
- போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது.
- பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது.
பல்லடம் :
பல்லடம் பகுதியில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர்.
ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்து அறிவிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில், போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் லாரியை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக செல்லக்கூடாது மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறித்தினார். ஆனால்அந்த லாரி டிரைவர் அவர் மீது மோதுவது போல் லாரியை ஓட்டி நிற்காமல் சென்றுள்ளார்.
இதையடுத்து செல்போன் மூலம் அருகிலுள்ள நால்ரோடு பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசாரிடம், அந்தப் பெண் போலீஸ், லாரி அத்துமீறி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கி, ஏன் மாற்றுப்பாதையில் செல்லாமல், பெண் போலீஸ் மீது மோதுவது போல் லாரியை ஓட்டினாய் எனக் கேட்டுள்ளார். இதற்கு அந்த டிரைவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை லாரியிலிருந்து இறங்கும்படி போலீஸ்காரர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த டிரைவர் இறங்க மறுத்ததாகவும், அவரது கையைப் பிடித்து போலீசார்இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை, அந்த வழியாக சென்ற பயணி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.
- போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
- செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார்.
விழுப்புரம் :-
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்து வருவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.கன்னத்தில் அறைஇதனை தொடர்ந்து மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸாண்டர் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
அப்போது மணி என்பவரின் மனைவி செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் பெண் காவலர் அம்முவை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதுபற்றி விசாரணை நடத்த ப்பட்டதில் விசாரி த்ததில் அந்த பெண்ணுக்கு சாமி வந்தால் எதிரில் இருப்ப வர்களை அடிப்பார்களாம். நேற்று அதே போல் சாமி வந்ததால் அடித்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செந்தாமரை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார்.
- மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் பாணாம்பட்டு பகுதி நடராஜன் மனைவி மணிமேகலை (வயது 39). பெண் போலீஸ். இவரும் நடராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடராஜன் தனியாரில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. பெண் போலீஸ் மணிமேகலை சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்தது. அதனால் நடராஜன் குழந்தைகளை அவருடன் அழைத்து கொண்டு வந்து விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.
கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென எண்ணிய மணிமேகலை அலுவலகத்தில் பணிமாறுதல் கோரியதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் துறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை வீட்டிற்க்கு சென்ற மணிமேகலை, தன்னுடைய உறவினர் திருமணத்திற்க்கு வருமாறு நடராஜனை அழைத்துள்ளார். இதில் இவ்விருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் போலீஸ் மணிமேகலை இரவு 2 மணிக்கு மேல் வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு முழித்த நடராஜன், மணிமேகலையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இவருக்கு 90 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் பெண் போலீஸ் மேல்சிகி ச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.
கோவை:
கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.
போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.
இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.
நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.
இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
- பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
தெலுங்கானா மாநிலம், பேகம்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக சுனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு லிங்கம் பள்ளியில் இருந்து பலக்கணுமா செல்லும் எம்.எம்.டி. எஸ் ரெயில் பேகம் பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது.
பயணிகள் ஏறிய பின்னர் சிறிது நேரம் கழித்து ரெயில் மீண்டும் மெதுவாக கிளம்பியது. தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
அப்போது சரஸ்வதியின் கால் தவறி ரெயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையே சிக்கியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சுனிதா இதனைக் கண்டு திடுக்கிட்டார். ஓடி சென்று துரிதமாக செயல்பட்டு சரஸ்வதியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனை கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் சரஸ்வதி காலில் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.
சரஸ்வதியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
- சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர்:
ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
- 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
- ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
- கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
- ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.
கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
- வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
- முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது.
நாகர்கோவில்:
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் கேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று (செவ்வாய்க்கிழ மை) குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது. அப்போது மின்னலாக ஒரு பெண் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இறங்கினார்.
இங்கும் அங்கும் கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தியும், போகச்செய்தும் சிறிது நேரத்தில் நெருக்கடி நிலையை சீர்படுத்திய அவரை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். ஆண்களும் பெண்களும் வாகனங்களை விட்டு இறங்காமல் காத்து நின்ற போது, வேகமாக செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடியை தீர்த்தவர் குறித்து விசாரித்த போது, அவர் பெண் போலீஸ் பவானி என தெரிய வந்தது.

ஆனால் அவர் பணிபுரிவது நம் மாவட்டத்தில் அல்ல. கோவையில் பணியாற்றும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வேர்கிளம்பி வந்த அவர், ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை பார்த்து உடனடியாக களம் இறங்கி நிலைமையை சமாளித்துள்ளார். விடுமுறையிலும் பொதுச்சேவை புரிந்த அவரது செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலானதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- ரஞ்சித் குமார் என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
- மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகள் சவிதா இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (32) என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்ப டுகிறது. சவிதா என்பவர் ரஞ்சித்குமாருக்கு ஏற்கனவே ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் ஆக மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று துருகம் சாலையில் பஞ்சர் கடை அருகே சவிதா வந்து கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித்குமார் வழிமறித்து ரூ.30 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற ப்படுகிறது. இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.
- அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த பகுதி வழியாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராட்சத கொள்கலனை வேடிக்கை பார்க்க சென்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசாரின் ஜீப் அருகே இருவரும் நின்றிருந்தனர். அப்போது ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.
அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.
மேலும் திருடிய செல்போனை தந்துவிடும்படியும் கூறி மிரட்டினார். இதை கண்டு மிரண்டு போன ஜெயச்சந்திரனின் மகள் கதறி அழுதார். அப்போது ஜீப்பில் இருந்த இன்னொரு பெண் போலீஸ் , ரெஜிதா தவறவிட்ட செல்போன், ஜீப்பின் சீட்டுக்கு அடியில் கிடந்ததாக கூறி அதனை அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து ஜெயச்சந்திரனையும், அவரது மகளையும் ரெஜிதா விடுவித்தார். இந்த சம்பவங்களை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
சாலையில் வேடிக்கை பார்க்க வந்த தந்தையைம், மகளையும் பெண் போலீசார் திருட்டு பட்டம் கட்டியதாக கூறி அதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தனக்கு திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்திய பெண் போலீஸ் ரெஜிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயச்சந்திரன் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு, பெண் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இதனை பெண் போலீஸ் ரெஜிதாவிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் எனவும் கூறியது. இதையடுத்து கேரள அரசு சிறுமிக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டு தொகையான ரூ.1.50 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.1.75 லட்சத்தை பெண் போலீஸ் ரெஜிதா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.