search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS Meeting"

    • 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்:

    ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.

    தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #RSS invites #Mayawati #MamataBanerjee
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் வரும் 17–ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநில முதல்–மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்கள் உள்பட பலருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்க திட்டமிட்டு உள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதிக்கு நேற்று அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் மாயாவதி நிச்சயம் பங்கேற்பார். மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறின.

    பாஜக தலைவர்கள் அளித்த யோசனையின் பேரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
    ×