என் மலர்
நீங்கள் தேடியது "mamata banarjee"
- விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
- விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதுபெரும் பொதுத் தலைவரும், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இன்று சென்னையில் காலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.
- திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்".
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இருப்பதை யாராலும் கற்பனைக் கூட செய்யது பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதுதொடர்பாக, கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதாகவும், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான தொகுதிப்பங்கீடு விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
- சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
#WATCH | West Bengal | Wagon of Kanchenjunga Express train suspended in the air after a goods train rammed into it at Ruidhasa near Rangapani station under Siliguri subdivision in Darjeeling district today; rescue operation underway pic.twitter.com/rYnEfC3vic
— ANI (@ANI) June 17, 2024
- ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை.
- சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்டமிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.
மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரை வார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.
என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார். இது இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர். சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு வாய்ப்பளித்தால் மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவியை கவனித்துக் கொண்டே இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்ல முடியும்' என்று கூறி இருக்கிறார்.
இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சல சலப்பை உருவாக்கி இருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
சரத்பவார் இது குறித்து கூறுகையில், "இந்தியா கூட்டணியை வழி நடத்த கேட்கும் உரிமை மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது. இந்தியா கூட்டணியை வழி நடத்த அவருக்கு ஆற்றல் இருக்கிறது. அந்த பொறுப்புக்கு அவர் தகுதியானவரும் கூட" என்றார்.
அதுபோல கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும், மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். மம்தா பானர்ஜி தேசிய தலைவராக மாற வேண்டும் என்ற ஆசையில் இப்படி கூறி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வெறும் தோரணைக்காகவே மம்தா பானர்ஜி பேசுகிறார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கிணடல் செய்துள்ளனர். மேலும் மாநில கட்சி தலைவர் எப்படி தேசிய கூட்டணியை வழி நடத்தி செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் மேலும் பிளவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.
இந்த நடவடிக்கைகளை 50 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக எல்லை பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லிக்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிலுவை தொகை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
மம்தா பானர்ஜி வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை டெல்லியில் இருக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசும் அவர் பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.
இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.
என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.








