என் மலர்
நீங்கள் தேடியது "vijayakant"
- விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
- கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
புத்தாண்டு முன்னிட்டு விஜயகாந்தை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக கைது நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Karunas #Vijayakant
சென்னை:
முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கு பல அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக இருக்கவேண்டும். தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது!
என விஜய காந்த் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்ல இரங்கல் தெரிவித்துள்ளார். #கலைஞர் #RIPKarunanidhi
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WeiuqmCzkF
— Vijayakant (@iVijayakant) August 8, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest
சென்னை:
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest