என் மலர்
நீங்கள் தேடியது "ஏஆர் முருகதாஸ்"
- இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
- ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன்.
- நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
''விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்... தம்பி தம்பிதான்.
ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? என்றார்.
- மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது.
- இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,"மான்கராத்தே நிகழ்ச்சியின் போது, தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒரு நடிகராக சிவகார்த்திகேயனை நான் கண்டேன்.
எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். இப்போது மதராசி நிகழ்ச்சியில் சிவகாரத்திகேனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு எடுக்க திட்டமிட்டுள்ளது. அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்காக படக்குழு தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ளனர்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. படம் வெளியாகி 9 நாட்கள் ஆன பிறகே இந்திய அளவில் இதுவரை மொத்தம் ரூ.104.25 கோடியை வசூல் செய்துள்ளது.
இது போன்ற ஒரு படம் முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும். இதனால் இப்படத்தின் வசூல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனம் தெரவித்தனர்.
இதனை தொடர்ந்து திரையரங்கில் 'சிக்கந்தர்' படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.160 கோடியும், இந்திய அளவில் ரூ.84.25 கோடி வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் என கூறப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூலித்திருந்தது. ஆனால் முதல் நாளில் ரூ. 33 கோடி வசூலித்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் தொடக்க வசூலை சிக்கந்தரால் முறியடிக்க முடியவில்லை.
- கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
- தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எந்திரன், சந்திரமுகி, விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் சூர்யா, நயன்தாரா, அசின், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, ''கஜினி 2-ம் பாகம் குறித்து எனக்கு சில யோசனைகள் உள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.
சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947- ஆகஸ்ட் 16' படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ்
இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் -கௌதம் கார்த்திக்
இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சப்ஜெக்ட் இருக்கிறதா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஏனென்றால் கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த படம் தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் சிறந்த இருபது இயக்குனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது கேரியர் பெஸ்ட் பிலிம் கமல் சாரோட படமாகதான் இருக்கனும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை" என்று கூறினார்.
- சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஏழாம் அறிவு’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படத்தில் கதாநாயகியான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார். இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.

டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு காட்சி வருகிறது, அது வேண்டாம் எடுத்துவிடலாம் என்று கூறினார். ஆனால், நான் சின்ன விஷயம் தான் விட்டு விடுங்கள் என்று கூறினேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது" என்று கூறினார்.






