என் மலர்
நீங்கள் தேடியது "சல்மான்கான்"
- 59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘முரட்டு சிங்கிள்' ஆக வலம் வருகிறார்.
- தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து முதல்முறையாக சல்மான்கான் பேசியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சல்மான் கான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கட்டுடல் கொண்ட கதாநாயகனாகவும் வலம் வருகிறார்.
கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற படத்தில் சல்மான்கான் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சினிமா மட்டுமின்றி டி.வி.யில் இந்தி 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் 'முரட்டு சிங்கிள்' ஆக வலம் வருகிறார். சமீபகாலமாக உடல் சோர்வுடன் காணப்படும் சல்மான்கான், தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது, ''டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற நோய் காரணமாக, எனது மூளையில் ரத்த நாள வீக்கம் பிரச்சனை இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏ.வி. மால்பார்மேஷன் என்ற பிரச்சனையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். எல்லாம் என் ரசிகர்களுக்காக...'', என்றார்.
சல்மான்கான் குறிப்பிட்ட டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற பிரச்சனையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் 'தற்கொலை நோய்' என அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. படம் வெளியாகி 9 நாட்கள் ஆன பிறகே இந்திய அளவில் இதுவரை மொத்தம் ரூ.104.25 கோடியை வசூல் செய்துள்ளது.
இது போன்ற ஒரு படம் முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும். இதனால் இப்படத்தின் வசூல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனம் தெரவித்தனர்.
இதனை தொடர்ந்து திரையரங்கில் 'சிக்கந்தர்' படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.160 கோடியும், இந்திய அளவில் ரூ.84.25 கோடி வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் என கூறப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூலித்திருந்தது. ஆனால் முதல் நாளில் ரூ. 33 கோடி வசூலித்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் தொடக்க வசூலை சிக்கந்தரால் முறியடிக்க முடியவில்லை.
- இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

அட்லீ
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
- இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

சல்மான்கான் - ஜானி மாஸ்டர்
இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.
- ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.

சல்மான்கான்
இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் சல்மான்கானின் அலுவலகத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
- கொலை மிரட்டல் விடுத்ததாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோகித் கார்க் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்தார்.

சல்மான்கான்
போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சல்மானுக்கு ஒய்.பிளஸ். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இமெயில் ஐ.டி. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- இதில் நடிகர் சல்மான்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

என்டம்மா பாடல் -கிஸி கி பாய், கிஸி கி ஜான்
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.
- பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.
- சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சல்மான்கான்
இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
- சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’.
- இப்படம் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்'என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கிசி கா பாய் கிசி கி ஜான்
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Your love has made KBKJ a worldwide hit, grossing 112.80 CR.
— Zee Studios (@ZeeStudios_) April 24, 2023
Watch #KisiKaBhaiKisiKiJaan In Cinemas Now!
Book Your Tickets Now ??
? - https://t.co/q8HJyYQcuQ@BeingSalmanKhan @hegdepooja @VenkyMama @farhad_samji @IamJagguBhai @bhumikachawlat @boxervijender #AbhimanyuSingh… pic.twitter.com/Y4PMp1T4rn
- நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கானுக்கு கையில் அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார்.

காயமடைந்த சல்மான்கான்
இந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் வந்து சல்மான்கானை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்தனர். தோள்பட்டையில் பேண்டேஜ் ஒட்டி தசைநார்ப் பிடிப்பைச் சரி செய்தனர். சல்மான்கான் இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
- இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
- அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.
இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

சல்மான்கான்
மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.






