search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central jail"

    • மத்திய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என புகார் எழுந்துள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லலூர் ஒன்றி யத்தை சேர்ந்த தெத்தூர், டி.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட கரடிக்கல் அருகில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை யடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி மதுரை மத்தியசிறைச்சாலையை புதியதாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் 67ஏக்கர் இடம் தேர்வு செய்துள்ளது.

    அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் வந்தபோது விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தி மத்திய சிறைச்சாலை அமைக்க தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் காந்தி ஜெயந்தியை யொட்டி கிராமசபைக்கூட்டங்கள் நடந்தது. தெத்தூரில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசனும், டி.மேட்டுப் பட்டியில் நடந்த கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாம் பழனிச் சாமியும் தலைமை தாங்கி னர்.

    இந்த கூட்டங்களில் சிறுமலையடிவாரத்தில் கரடிக்கல் பகுதியில் உள்ள தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்களில் கலைஞர் ஆட்சி காலத்தில் ஒருசிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பட்டா கோரி பல போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

    இந்த மானாவாரிநிலங்களில் 40ஆண்டுகளுக்கு மேலாக மா, கொய்யா, புளி, முருங்கை உள்ளிட்ட பலன் தரும் மரங்களும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்ட பயிர்களும் பருவ மழைக்கு ஏற்றபடி விவ சாயம் செய்து பலனடைந்து வந்தனர். அதனால் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

    பல்லுயிர்களின் வசிப்பிட மான சிறுமலை யிலிருந்து காட்டுமாடு, வரையாடு, காட்டுபன்றி, முள்ளம்பன்றி, செம்பூத்து, தேவாங்கு, குரங்குகள், மலை பாம்பு உள்ளிட்டவை களை பாதுகாக்கவும், சுற்று சூழலலை நிலைப்படுத்தவும் சிறைத்துறை மூலம் சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்காக தேர்வுசெய்துள்ள இடத்தில் சிறைஅமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

    • மதுரை பாலமேடு அருகே மத்திய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை அரசரடி பகுதி யில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத் தில் கட்டப்பட்டதா கும். 158 ஆண்டுகள் பழமையான இந்த சிறையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். இதன் வளாகத்தி லேயே செயல்படும் பெண்கள் சிறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

    மக்கள் ெதாகை அதிகரிப்புக்கு ஏற்ப பெருகும் வாகன போக்குவரத்தால் கடுமையான நெருக்கடி மதுரை நகர் பகுதியில் ஏற்படுவது தடுக்க முடியா ததாகி விட்டது. இதனால் மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதுக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி மதுரை -திருவாதவூர் சாலையில் இடையபட்டி கிராமத்தில் மலையடிவார பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வானது. இங்கு சென்னை புழல் சிறைக்கு நிகரான வசதிகளுடன் ரூ.400 கோடியில் சிறை வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இடை யபட்டியில் மத்திய சிறை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட் டது. பின்னர் பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மதுரை மத்திய சிறை வளாகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்தநிலையில் தெத்தூர் கிராமத்திலும் சிறை வளாகம் அமைக்க அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோருக்கு பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது.

    தற்போது அந்த இடத்தை தேர்வு செய்து சிறைச்சாலை அமைக்கப்போவதாக கூறு வது கண்டனத்திற்கு ரியது. எனவே உடனடியாக தெத் தூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் அமைக்கும் முயற் சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தெத்தூர் கிராமத்துக்கு போலீஸ் படையுடன் சென்ற குழுவி னர் சிறை வளாகம் அமைய வுள்ள இடத்தில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அங்கு போடப்பட்டி ருந்த கம்பி வேலிகளும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். மேலும் இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் போலீசார் தெரி–வித்துள்ளனர்.

    • சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் அவரை கைது செய்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. சந்திரபாபு நாயுடுவை மீண்டும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

    அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சி.ஐ.டி. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

    சி.ஐ.டி. அதிகாரிகளின் மனு தாக்கல் ஏற்ற நீதிபதி சந்திரபாபு நாயுடுவிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். விசாரணையின் போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க காலகால அவகாசம் வழங்க வேண்டும் ஒரு வீடியோகிராபர் 2 ஊடகவியலாளர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர்.

    இதையடுத்து சிஐடி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கள் 3 பேர் இளநிலை போலீஸ் அதிகாரிகள் 6 பேர் நேற்று காலை 9.30 மணி அளவில் ராஜமுந்திரி ஜெயிலுக்கு சென்றனர்.

    அப்போது சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 2½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் சீனிவாசராவ், சுப்பாராவ் உடன் இருந்தனர். மதியம் 1 மணி நேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் கிடுக்குபிடி கேள்விகளால் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தினர்.

    73 வயதான சந்திரபாபு நாயுடு போலீஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    இதையடுத்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அசோக்ராமன் அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார்.
    • அசோக்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெரு ைவ சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த பழனிவேலிடம் மாமூல் கேட்டு மிரட்டி கொடுக்க மறுத்தவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தொடர் குற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கலெக்டர் உத்தரவுபடி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்:

    ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.

    தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.

    போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.

    இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

    நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.

    இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் தற்போது மத்திய சிறை அமைந்துள்ள காந்திபுரம் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். மேலும் மாநகரின் மையப்பகுதியிலும் ஜெயிலானது அமைந்துள்ளது.

    மத்திய ஜெயில் வளாகத்தில் போதிய அளவில் வசதிகள் இல்லை. இதனால் வேறு இடத்துக்கு ஜெயில் வளாகத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில் கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது. 

    இதையடுத்து பூமிதான இயக்கத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருந்த 100 ஏக்கர் நிலம் புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டது. பிளிச்சியில் புதிய மத்திய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகளில் முதற்கட்டமாக 95 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இதில் தற்போது 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒரு நிலத்தை வேறு அரசுத்துறைக்கு வளர்ச்சி பணிகளுக்காக மாற்றி கொடுக்கும்போது முன் நுழைவு அனுமதி சான்றிதழ் இருந்தால் தான் சம்பந்தப்பட்ட அரசுத்துறையில் இருந்து நிதி ஒதுக்கீடு திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்பது விதியாகும். 

    இதன் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ள முன் நுழைவு அனுமதி சான்றிதழின் மூலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அந்த நிலம் தற்போது ஜெயில் துறையினர் வசம் வந்துள்ளது.

    இதையடுத்து புதிய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை.

    மதுரை

    தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை. எனவே ஜெயிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    எனவே மதுரை மத்திய ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை மத்திய ஜெயிலுக்குள் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த படியாக சிறைவாசிகளுக்கு இன்டர்காம் நேர்காணல் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் புதிதாக ஒரு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கைதிகளின் உடைமைகளை சோதனை செய்யும் வகையில் அதிநவீன சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று டி.ஜிபி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் மற்றும் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கருவிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயில் நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மதுரை மத்திய ஜெயிலில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் செயல்பாட்டை, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு உள்ளது. இது கைதிகளின் உடமைகளை துல்லியமாக பரிசோதனை செய்யும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முயன்றால், அதனை இந்த அதிநவீன எந்திரம் உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜெயிலுக்குள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்படும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
    • திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார்

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறை கைதிகள்

    இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளாகவும், சிலர் பழிக்கு, பழி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ நூலகத்துறை சார்பில் சிறைச்சாலைக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கைதி களுக்கு புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. பலர் சிறைக்குள் இருந்தே படித்து கல்லூரி பேராசிரி யராகவும் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் மற்ற கைதிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் உயரும் விதமாக அவர்களுக்கு புத்தகங்களை வழங்கிட சமூக ஆர்வலர்கள் ஆசைப்படுகின்றனர்.

    நூலகம்

    ஆனால் இந்த நூலகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் புத்தகங்களை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.

    அந்த அறைக்கு சிறை கைதிகளுக்கு புத்தக தானம் செய்யும் அறை என பெயரிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக வழங்க விரும்பும் புத்தகங்களை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை சிறை காவலர்கள் எடுத்துச்சென்று சிறையில் உள்ள நூலகத்தில் சேர்ப்பார்கள்.

    ரூ.25 ஆயிரம் புத்தகம்

    இன்று திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார். அதனை உதவி ஜெயிலர் சண்முகம், முதல் தலைமை காவலர் முத்துச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழில் அதிபர்கள் மவுலானா, பீர் மைதீன், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் இயக்குனர்கள் எஸ். செய்யது முகம்மது, எம்.செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே. ஜி. வலசு, பெருமாள்மலையை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகள் தீபா.

    கடந்த 2021 ஜூன் 26-ந் தேதி தனது தோட்டத்தில் மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் கூலி தொழிலாளி முருங்கத் தொழுவை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோருடன் கருப்பண்ணன் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது வந்த ஒரு வாலிபர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு முன் மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறி 4 பேருக்கும் மாத்திரை கொடுத்தார்.

    மாத்திரை சாப்பிட்ட 4 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசார ணையில் கருப்பண்ணன் நிலத்தை குத்தகைக்கு எடுத்த சென்னி–மலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவருக்கும் கருப்பண்ணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

    கருப்பண்ணன், கல்யாண சுந்தரத்துக்கு ரூ.14 லட்சம் வரை பணம் கொடுத்து ள்ளார். அந்த பணத்தை கருப்பண்ணன் கல்யாண சுந்தரத்திடம் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம் அடைந்த கல்யாண சுந்தரம் கருப்பண்ணனை கொலை செய்யும் நோக்கத்தில் தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை சென்னிமலை எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் போத்தீஸ் குமார்(20)என்பவர் மூலம் கொடுத்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    நீதிபதி மாலதி நேற்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதில் முக்கிய குற்றவாளி யான விவசாயி கல்யாண சுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இதேப்போல் மற்றொரு குற்றவாளியான போத்தீஸ்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • மத்திய சிறையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
    • மேற்கு வங்க கைதி உள்பட 4 பேர் மீது வழக்கு

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு பல்வேறு செல்கள் உள்ளன. பல்வேறு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது செல்போன், சிம் கார்டு, பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் திண்டுக்கல்லை சேர்ந்த கைதி வெள்ளத்துரை என்கிற அரவிந்த், மதுரை கைதி விக்னேஷ், சிவகங்கையை சேர்ந்த முகிலன் என்கிற ரவி, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாடன் தாஸ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி மத்திய சிறையில் கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.
    • சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என தேடினர்.

    திருச்சி :

    திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் இருந்து வருகின்றன. மேலும் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல்களும் நடக்கின்றன.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் அப்பள்ளியை சூறையாடிய வழக்கில் கைதான 200-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கைதியிடமிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மத்திய சிறையில் சிறையில் அதிரடி சோதனை நடைபெற்றது. திருச்சி உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார், 20 ஆயுதப்படை பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் காலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது.

    அவர்களுடன் சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிைற காவலர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என சல்லடை போட்டு தேடினர். இதில் ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஜெயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஜெயிலுக்குள் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×