search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palai Central Jail"

    • கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

    இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாளை மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    பாளை மத்திய ஜெயிலில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு பீடி, சிரெட், செல்போன், கஞ்சா உள்ளிட தடைசெய்யப்பட்ட பொருட்கள், புழக்கத்தில் உள்ளதா? என்று போலீசார் அவ்வப்போது அறிவிப்பில்லாமல் தீடீர் சோதனை நடத்துவார்கள்.

    அதே போன்று இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீசார் கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் துணை கமி‌ஷனர் சுகுனாசிங் மேற்பார்வையில் உதவி கமிஷ்னர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, காளியப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.

    அங்கு ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்த போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பின்னர் காலை 6 மணி முதல் 7 .30 வரை அதிரடி சோதனை நடந்தது. கைதிகள் தங்கும் அறை, குளியல் அறை, கழிவறை மற்றும் மைதானத்தில் உள்ள சந்தேகப்படும் இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அதை போல் முக்கிய கைதிகளிடமும். சோதனை நடத்தினார்கள் சுமார் 1 .30 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஜெயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் ஆய்வு செய்து விட்டு திரும்பினர் பாளை ஜெயிலில் சோதனை நடந்த போது ஜெயிலின் வெளிப்புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #tamilnews
    ×