என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள் மோதல்"

    • அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடமதுரை திடீர்நகரை சேர்ந்த வீரபாபு (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் மதுரையை சேர்ந்த செல்வக்குமார் (25) என்ற கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சாப்பாட்டு தட்டால் வீரபாபு தலையில் செல்வக்குமார் பயங்கரமாக தாக்கினார். இதனையடுத்து வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நகர் மேற்கு போலீசார் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் சிறையில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க செல்வக்குமார் உள்ளிட்ட 10 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர்.

    • கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

    இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
    • மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நித்தியானந்தம் தரப்பினருக்கும், தொழிலதிபர் வேலழகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனா தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறைத்துறை வார்டன்கள் கைதிகள் மோதலை தடுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி ஜெயிலில் பரபரப்பு ஏற்பட் டது.

    கைதிகள் மோதல் தொடர்பாக சிறைத்துறையினர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி நித்தியானந்தம் தரப்பினர் 9 பேர் மீதும், ஜனா தரப்பினர் 4 பேர் மீதும் என மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயில் அடிக்கடி இதுபோன்று கைதிகள் மோதலை தடுக்கும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×