என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி ஜெயிலில் கைதிகள் பயங்கர மோதல்- 13 பேர் மீது வழக்கு
    X

    புதுச்சேரி ஜெயிலில் கைதிகள் பயங்கர மோதல்- 13 பேர் மீது வழக்கு

    • நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
    • மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நித்தியானந்தம் தரப்பினருக்கும், தொழிலதிபர் வேலழகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனா தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறைத்துறை வார்டன்கள் கைதிகள் மோதலை தடுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி ஜெயிலில் பரபரப்பு ஏற்பட் டது.

    கைதிகள் மோதல் தொடர்பாக சிறைத்துறையினர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி நித்தியானந்தம் தரப்பினர் 9 பேர் மீதும், ஜனா தரப்பினர் 4 பேர் மீதும் என மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயில் அடிக்கடி இதுபோன்று கைதிகள் மோதலை தடுக்கும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×