என் மலர்
நீங்கள் தேடியது "villagers protest"
- உசிலம்பட்டி அருகே கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் மீன் பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.
இதில் பொதுப்பணி த்துறை உதவி பொறியா ளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், பணி ஆய்வாளர் ஒச்சுக்காளை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் நடத்தினர்.
இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், வாலாந்தூர் முதலைக்குளம், விண்ணகுடி உள்பட பல்வேறு கண்மாய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், செல்லப்பன் கோட்டை கண்மாய் மற்றும் பல்வேறு கண்மாய்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து ஏலத்தை நிறுத்தி வைக்க கோரியும், கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது எனவும், குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.கண்மாய்கள் ஏலம் தொடர்பாக இரு தரப்பின ருக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
- எதிர்ப்பால் பணிகள் நிறுத்தப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான ஆரம்பப்ப பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
இப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் செல்போன் டவர் அமைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு செல்போன் டவர் அமைக்கும் ஆரம்ப பணிகள் நிறுத்தப்பட்டது.
- மதுரை பாலமேடு அருகே மத்திய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
மதுரை
மதுரை அரசரடி பகுதி யில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத் தில் கட்டப்பட்டதா கும். 158 ஆண்டுகள் பழமையான இந்த சிறையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். இதன் வளாகத்தி லேயே செயல்படும் பெண்கள் சிறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.
மக்கள் ெதாகை அதிகரிப்புக்கு ஏற்ப பெருகும் வாகன போக்குவரத்தால் கடுமையான நெருக்கடி மதுரை நகர் பகுதியில் ஏற்படுவது தடுக்க முடியா ததாகி விட்டது. இதனால் மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதுக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி மதுரை -திருவாதவூர் சாலையில் இடையபட்டி கிராமத்தில் மலையடிவார பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வானது. இங்கு சென்னை புழல் சிறைக்கு நிகரான வசதிகளுடன் ரூ.400 கோடியில் சிறை வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இடை யபட்டியில் மத்திய சிறை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட் டது. பின்னர் பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மதுரை மத்திய சிறை வளாகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் தெத்தூர் கிராமத்திலும் சிறை வளாகம் அமைக்க அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோருக்கு பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது.
தற்போது அந்த இடத்தை தேர்வு செய்து சிறைச்சாலை அமைக்கப்போவதாக கூறு வது கண்டனத்திற்கு ரியது. எனவே உடனடியாக தெத் தூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் அமைக்கும் முயற் சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தெத்தூர் கிராமத்துக்கு போலீஸ் படையுடன் சென்ற குழுவி னர் சிறை வளாகம் அமைய வுள்ள இடத்தில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அங்கு போடப்பட்டி ருந்த கம்பி வேலிகளும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். மேலும் இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் போலீசார் தெரி–வித்துள்ளனர்.
- சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை குலவையிட்டு பாடினர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொட்டக்குடி ஊராட்சியில் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் நகர்.
இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மண் சாலை போக்குவரத்திற்கு மட்டுமின்றி, திருவிழா காலங்களில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு ஊர்வலத்துக்கும் முக்கிய பயன்பாடாக உள்ளது.
சுமார் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை இல்லாமல் மிகவும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் இந்த தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கூட தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. மாறி உள்ளது. இதனால் மழைநீர் கழிவு நீராக சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதை கண்டித்தும், புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாற்று நடும்போது குலவையிட்டு தங்களது துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
- அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.
- இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 85). இவர் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டார். இவரது உடலை பக்கத்து தோட்டத்தின் வழியாக எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.
இதனால் அப்போதே பொதுமக்கள் கம்பி வேலியை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்ைத நடந்து கொண்டு இருந்தபோதே இறந்தவர் குடும்பத்தினர் கம்பி வேலியை தாண்டி உடலை எடுத்துச் ெசன்றனர். மேலும் அவரது உடலையும் மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் புகார் அளித்தால் அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர்.
- தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
- பொதுமக்கள் திரண்டு வந்து சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னிமலை:
சென்னிமலை நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த சென்னி மலை-நகர பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல் காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவழி ச்சாலை அமைக்க நெடுஞ்சா லை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் மெயின் ரோட்டில் இணைக்கும் படி அளவீடு செய்துள்ளனர்.
அந்த பகுதியில் புறவழி சாலை வேண்டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.
மேலும் புறவழி சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என கூறி திருவள்ளுவர் நகர், காமராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடியிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, சென்னி மலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.
இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிக ப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்காமால் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கிராம மக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
ஊட்டி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என கருதி ஊட்டி நகராட்சி யை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த மாதம் 5-ந்தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏசுராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி, இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் நேற்று இத்தலாரில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தலார் பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் ஹாலன் தலைமை தாங்கினார். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக போராட்டத்தில் பங்கேற்றார்.
இதுதொடர்பாக கிராம தலைவர் ஹாலன் கூறும்போது, `ஊட்டியை மாநகராட்சியாக மாற்றி இத்தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க ஊராட்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தலார் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு மூலம் வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும். எனவே ஊட்டி நகராட்சியுடன் இத்தலாரை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்றார்.
- 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
- கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம்.
மதுரை:
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளயில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள், நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் சின்ன உடைப்பு கிராம நிலம் கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தங்களை மீள்குடி அமர்த்தாமல் இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நேற்று மதுரை ஐகோர்ட்டில் கிராம மக்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுதொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 19-ந்தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டு இன்று தொடர்ந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
- தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- திட்டக்குடி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
- அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாந்ப்ப அய்யனார் கோவிலில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென திட்டக்குடி வட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும் எனக்கோரிக்கை வைத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் , கையில் கருப்பு கொடி ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.






