search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisaiyanvilai"

    • திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர்.
    • தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.

    இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். யுவராஜ் குருரூபவ் முதலிடத்தையும், பிரதிவ் வாசன்ரூபவ் 2-ம் இடத்தையும், அஸ்வின் 3-ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

    முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்களை வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பாராட்டி பரிகளை வழங்கினார்.

    • நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    திசையன்விளை அருகே உள்ள இட்ட மொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் (வயது 22). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார். அதன்படி நாகலிங்கத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் இன்று நாகலிங்கம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • காங்கிரஸ் பிரமுகர் மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

    திசையன்விளை:

    காங்கிரஸ் பிரமுகர் சிங்கை முருகன். இவருடைய மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரின் மருத்துவ செலவிற்காக நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் சார்பில் மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

    அப்போது ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், பணகுடி ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.
    • உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள ஆவுடையாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகள் சரஸ்வதி(வயது 20).

    விவாகரத்து

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.

    சரஸ்வதியின் உறவு முறையான ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மாசானமுத்து (22) மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    அதற்கு சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசானமுத்து, ஆவுடையாள்புரம் மாயாண்டி மனைவி செல்வி (வயது 52), வள்ளியூர் முருகன் மனைவி சுதா(35) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் இசக்கியப்பன், அவரது தாய் அழகு மாடத்தி (75) ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்தனர்.
    • ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் தலைமை தாங்கினார்.

    10-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

    மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இப்பயிற்சிகளை செய்தனர். சூர்ய நமஸ்காரம், விருட்சாசனம்ரூபவ், வஜ்ராசனமரூபவ், வீரபத்ராசனமரூபவ், உஸ்தாசனமரூபவ், யோகமுத்ரா போன்ற ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது.

    இறுதியில் யோகாசன பயிற்சியாளர் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

    திசையன்விளையில் ெபண் தபால் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.
    திசையன்விளை:

    திசையன்விளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருண்முத்து அனுஷா(வயது 23).

    இவர் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட அனுஷா, நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தார்.

    பின்னர் வீட்டில் மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு திசையன்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×