search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bypass Road"

    • புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
    • பொதுமக்கள் திரண்டு வந்து சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த சென்னி மலை-நகர பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல் காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவழி ச்சாலை அமைக்க நெடுஞ்சா லை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் மெயின் ரோட்டில் இணைக்கும் படி அளவீடு செய்துள்ளனர்.

    அந்த பகுதியில் புறவழி சாலை வேண்டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.

    மேலும் புறவழி சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என கூறி திருவள்ளுவர் நகர், காமராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடியிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, சென்னி மலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிக ப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்காமால் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.
    • புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பொது மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    மேற்கு புறவழிச்சாலை திட்டம்

    தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்து ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வித மாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு புற வழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த உத்தர விட்டார்.

    பணிகள் மும்முரம்

    அதன் அடிப்படையில் தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த புறவழிச்சாலை யானது தாழையூத்து, சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டி, ராமலிங்க நேரி, அபிஷேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, கோபால சமுத்திரம் வழியாக முன்னீர் பள்ளம் சென்று பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழி சாலையை அடைகிறது.

    கூடுதலாக 5 கிலோ மீட்டர்

    இந்த சாலை பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு பெரும்பாலான இடங் களில் எல்லை கற்களும் நடப்பட்டு விட்டது. ஆனால் இந்த பாதையில் தனிப்பட்ட நபர் ஒருவர் நிலம் இருப்ப தால் அந்த பகுதியில் உள்ள சாலையை மாற்றி வேறு பாதையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள் ளதாக தெரிகிறது.

    இதனால் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை இருக்கிறது. நில எடுப்பு செய்வது தொடர்பாக அதன் உரிமை யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தற்போது புதிய பாதையை பரிசீலனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    விபத்து அதிகம்

    தாழையூத்து ஊராட்சியில் 18 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் சங்கர் மேல் நிலைப்பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் அந்த வழியாக புறவழிச் சாலை அமைந்தால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே நாரணம்மாள் புரம் பகுதி 1 வழியாக இந்த புறவழிச்சாலையை அமைப்பதற்கு ஊர் பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். புறவழிச் சாலை என்பது ஊருக்கு முன்பு தான் தொடங்க வேண்டுமே தவிர ஊருக்கு உள்ளே வரக்கூடாது.

    எனவே மாவட்ட கலெக்டர் இதனை மறு ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்தபடி மேற்கு வழி சாலையை ஐ.சி.எல். நியூ காலனி குடியிருப்பு அருகே நாரணம்மாள்புரம் கிராமம் வழியாக தொடங்கும் வகை யில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
    • ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    பூந்தமல்லி:

    பருவமழை தீவிரம் அடையும் போது போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் காரணமாக அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    மழை காலத்தில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மழை நீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

    தற்போது அதே பகுதியில் மீண்டும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.

    இந்த முறையில் சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும். ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

    தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சந்தீப்சக் சேனா ஆய்வு மேற்கொண்டார். தற்போது முடிந்துள்ள பணிகளை விரைந்து முடித்து, இந்த பகுதியின் மேலே தார் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும் போக்குவரத்து தடை செய்யாமலும் தற்போது இந்த பகுதியில் புஷ் அண்ட் துரோ முறையில் கல்வெர்ட்டை அமைத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
    • நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.

    காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

    புறவழிச்சாலை

    போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
    • 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை மாநகரில் காளவாசல்-பைபாஸ் ரோடு குறிப்பிடத்தக்கது. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மதுரை அழகப்பன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அதில், காளவாசல்- பைபாஸ் ரோட்டில் சாலை யோரம் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மதுரை மாநக ராட்சி பதில் அளித்துள்ளது. அதில், பழங்காநத்தம் முதல் ஆரப்பாளையம் வரையிலான பைபாஸ் ரோட்டில் 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அவை மாநக ராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும் பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கடைகள் அமைந்து இருப்ப தால் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலை யிட்டு காளவாசல்- பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×