search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic crisis"

    • குடிநீர், வாறுகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
    • விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் அருகே சாலையோரங்களில் குடிநீர் பைப் மற்றும் வாறுகால் பணிகள் மேற்கொள்வதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.

    அதிலும் குறிப்பாக பாவூர்சத்திரம் நான்கு முக்கு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அந்தச் சாலை வழியாக செல்வதால் வாகனங்கள் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் அபாய நிலையும் உள்ளது.

    எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பாவூர்சத்திரம் நான்குமுக்கு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படாத வண்ணம் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது
    • அசுர வேகத்தில் செல்லும் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு , காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தென்காசி புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கார்களை நிறுத்துவதற்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் கட்ட வேண்டும். பாவூர்சத்திரம் ஸ்டேட் வங்கி அருகே தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், நகர் பகுதிகளில், அசுர வேகத்தில் செல்லும் அரசு பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் - ஆவுடையானூர் மற்றும் நாட்டார்பட்டி - பூவனூர் - திரவியநகர் சாலைகளை சீரமைக்க வேண்டும். தென்காசி நடு பல்கில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கழுகுமலை - சங்கரன்கோவில், சுரண்டை - பாவூர்சத்திரம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே பன்னடுக்கு கார் நிறுத்தும் வசதி குறித்து பரிசீலிப்பதாகவும், தென்காசி நகர் பகுதிக்குள் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைக்க புறவழிச் சாலை பணிகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகளும் உறுதி அளித்தனர். அப்போது பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும், ஆலங்குளம்- தென்காசி இடைய 4 வழிச்சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
    • நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.

    காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

    புறவழிச்சாலை

    போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.
    • 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை ரவுண்டானா முதல் முத்தை யாபுரம் வரை குடியிருப்பு பகுதியில் ஏராளமான சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடி

    இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படக் கூடிய திருச்செந்தூர் சாலையில் பள்ளி-கல்லூரி,தொழில் நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மாதம் தோறும் குடோன்களில் சரக்குகளை இறக்க மற்றும் ஏற்றி செல்ல வரும் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகவும், குறுக்கும் நெடுக்கமாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது,இதன் காரணமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசரமாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்கள் விபத்து களில் சிக்கி வருகின்றனர்.

    புகை மண்டலம்

    மேலும் நெருக்கடி மிகுந்த சாலைகளில் டாரஸ் லாரிகள் மிக அதிவேகத்தில் செல்வதால் சாலையில் குவிந்து கிடக்கும் மணல்கள் தூசி புகை மண்டலமாக மாறி வருகிறது.

    இதனால் நுரையீரல் சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட மாநகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.
    • போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.

    போக்குவரத்து நெருக்கடி

    ஏற்கனவே அகலம் குறைவாக உள்ள இந்த ரோட்டில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடைகள் முன்புள்ள கழிவுநீர் கால்வாயை ஒட்டி நடப்படாமல் 3அடி தள்ளி நிறுவப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.

    தார் ரோடு அமைக்கும்போது இருபக்கம் உள்ள கழிவு நீர் கால்வாய் வரை அமைக்காமல் 18 அடி அகலத்திற்கு குறைவாக ரோடு போட்டு விட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலைமை இங்கு உள்ளது.

    இந்த போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதியம்புத்தூர் ஊருக்கு வடபுறம் 120 அடி அகலத்தில் ஒரு ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் தற்சமயம் சாக்கடை நீர் செல்கிறது மழை காலங்களில் திருச்சிற்றம்பல பேரி குளத்தின் மறுகால் நீர் இந்த ஓடை வழியாக செல்வதுண்டு. இந்த ஓடை நடுவக்குறிச்சியில் ஆரம்பித்து மேற்கே இசக்கியம்மன் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் ரோட்டில் இணைகிறது.

    இந்த ஓடையின் வலது பக்கத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடை போன்று கான்கிரீட் கான் கட்டி மீதமுள்ள இடத்தில் மண் நிரப்பி சாலை அமைத்தால் கனரக வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சென்று விடும். இதனால் தற்போது உள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட முடியும். நடுவக்குறிச்சியில் இருந்து மேளமடம் சந்திப்பு வரை பஸ் சென்றுவர 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

    எனவே புதியம்புத்தூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அரசிடம் தெரிவித்து நிதி பெற்று இந்த போக்குவரத்து நெருக்குடிக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    • மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லடம் நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை -திருச்சி ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக செல்ல 45 வினாடிகளும், அதேபோல கிழக்கிலிருந்து மேற்காக செல்ல 45 வினாடிகளும் அனைத்து வாகனங்களும் செல்ல அமைக்கப்பட்டு இருந்தது.

    அதுபோல மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெரிய நகரங்களில் உள்ளது போல் முதல் 25 வினாடிகளுக்கு நேராக செல்லும் வாகனங்களுக்கும், கடைசி 20 வினாடிகளுக்கு பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களும் செல்ல சிக்னல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்துவதற்காக நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் சிக்னல் குறித்து அறிவித்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:- பெரிய நகரங்களில் உள்ளது போல் தற்பொழுது பல்லடத்திலும் சிக்னல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேராகச் செல்லும் வாகனங்களுக்கு 25 வினாடிகளும், பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு 20 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் 2 வழிகளிலும் ஒரே நேரத்தில் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய நடைமுறையை பின்பற்றி பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
    • அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் இருந்து வருகிறது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் தாம்பரம் வழியாக செல்கிறார்கள்.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகம் செல்பவர்கள் தினமும் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மேம்பாலம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப் பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில் ரெயில்வே பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வடக்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் முனையில் ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்னி பஸ் மற்றும் மாநகர பஸ்களும் நிற்பதால் சாலையின் இரு புறமும் மக்கள் நிற்கிறார்கள்.

    சாலையின் கிழக்கு பகுதியில் நடை மேம்பாலம் அருகே உணவு பொட்டலங்கள், தண்ணீர், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

    இதனால் ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி சாலை போன்ற முக்கிய சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்தபடியே உள்ளது.

    மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடக்கு பகுதியில் மேம்பாலத்தை மேலும் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

    இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறத்திலும் ஏறும், இறங்கும் மேம்பாலத்தை வள்ளுவர் குருகுலம் வரை நீட்டிக்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சண்முகம் சாலை, ராஜாஜி சாலை மற்றும் காந்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் இருந்து விடுபட லாம். பஸ்கள் மட்டும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும். பிற வாகனங்கள் தடையின்றி மேம்பாலம் வழியாக செல்லலாம்.

    தாம்பரம் மார்க்கெட்டை பல மாடி வணிக வளாகமாக மாற்றவும், அங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் சிறுவர் பூங்கா, கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும் என்றும் பல மாடி கட்டிடத்தின் 3-வது தளத்துடன் இணைக்கப்படும். அங்கு லிப்ட், எஸ்கலேட்டர்கள் கூடுதலாக பார்க்கிங் இடம் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
    • சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    சேலம், திருச்சி பாதையில் நாமக்கல் முக்கிய நகரமாக விளங்குகிறது. வளர்ந்து வரும் நாமக்கல் நகரத்தில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாமக்கல் வழியாக செல்லும் வாகனங்கள்

    தமிழகத்தில் லாரி, முட்டைகள் மற்றும் கோழி உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் தினமும் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.

    குறிப்பாக நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் வாகனங்களும், அதே போல தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் சேலத்தில் இருந்து மதுரை, கரூர் செல்லும் வாகனங்களும், இதேபோல மதுரையில் இருந்து சேலம் வரும் வாகனங்களும் அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் வந்து செல்கின்றன.

    நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருச்செங்கோடு, பரமத்தி, ராசிபுரம் உள்பட பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரி, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு அலுவலகங்கள், யூனியன் அலுவலகம், பள்ளி கல்லூரிகள் உட்பட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

    போக்குவரத்து நெரிசல்

    இதனால் நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பாக பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து இருக்கும். அதனால் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு–படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் நாமக்கல்‌ பஸ் நிலையத்திற்கு வெளிப்புறம் உள்ள மணிக்கூண்டு அருகே சாலையை அடைத்து, 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத படி போலீசாரால் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் அந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. மேலும் அந்த இடத்தில் சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் திருச்சி, துறையூர், மோகனூர் ரோடு உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள், மணிக்கூண்டு அருகே உள்ள பாதை அடைக்கப்பட்டு உள்ளதால் அதன் வழியாக செல்ல முடியாமல் பரமத்தி ரோடு வழியாக சுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அடைத்து வைக்கப்–பட்டுள்ள அந்த பாதையை திறந்து விட்டால், அதன் வழியாக பூங்கா சாலைக்கு எளிதாக 4 சக்கர வாகனங்க–ளும் சென்று விடலாம்.

    ஆனால் அந்த சாலை அடைத்து வைக்கப்பட்–டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி பூங்கா சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் கடுமையாக நிலவுகிறது.

    அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை அந்த சாலையின் நடுவிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டு செல்கிறார்கள். இதற்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பது போல் சாலை அடைத்து வைத்து உள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொதிப்படைந்து உள்ள–னர். எனவே முக்கிய சாலையான அந்த சாலையை திறந்து விட்டு 4 சக்கர வாகனங்களும் செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாமக்கல் நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

    • புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை.
    • சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பஜாரில் மேலசாத்தான்குளம் ரோடு, இட்டமொழி ரோடு, நாசரேத் ரோடு, முதலூர் ரோடு மற்றும் வாசக சாலை பஜார் உள்ளிட்ட சாலைகளில் தினசரி சிறிய வாகனங்களும் கனரக வாகனங்களும் சென்று வந்து கொண்டிருக்கிறது.

    இப்பஜார்களில் இருபுறமும் வியாபார கடைகள் உள்ளன. புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. அனைத்து பஜார்களிலும் வியாபார கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சென்றால் இரு பக்கமும் வாகனங்கள் சூழ்ந்து கொண்டு வெளியேவர முடியாத சூழ்நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நகர ம.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வாசக சாலை பஜாரில் இருந்து முதலூர் ரோடு வரையிலும் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சந்தித்து இடது பக்கமும் வலது பக்கம் சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், சாத்தான்குளம் வாசசாலை பஜாரில் இருந்து குமரி மாவட்ட பஸ்களும் வாகனங்களும் மற்றும் முதலூர், உவரி,திசையன்விளை வரை உடன்குடி, பெரியதாழை போன்ற ஊர்களுக்கும் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. முதலில் இந்த பஜார்களில் வாகனங்களை போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    ×