search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதியம்புத்தூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X
    புதியம்புத்தூரில் உள்ள வடக்குஓடை.

    புதியம்புத்தூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.
    • போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.

    போக்குவரத்து நெருக்கடி

    ஏற்கனவே அகலம் குறைவாக உள்ள இந்த ரோட்டில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடைகள் முன்புள்ள கழிவுநீர் கால்வாயை ஒட்டி நடப்படாமல் 3அடி தள்ளி நிறுவப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.

    தார் ரோடு அமைக்கும்போது இருபக்கம் உள்ள கழிவு நீர் கால்வாய் வரை அமைக்காமல் 18 அடி அகலத்திற்கு குறைவாக ரோடு போட்டு விட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலைமை இங்கு உள்ளது.

    இந்த போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதியம்புத்தூர் ஊருக்கு வடபுறம் 120 அடி அகலத்தில் ஒரு ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் தற்சமயம் சாக்கடை நீர் செல்கிறது மழை காலங்களில் திருச்சிற்றம்பல பேரி குளத்தின் மறுகால் நீர் இந்த ஓடை வழியாக செல்வதுண்டு. இந்த ஓடை நடுவக்குறிச்சியில் ஆரம்பித்து மேற்கே இசக்கியம்மன் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் ரோட்டில் இணைகிறது.

    இந்த ஓடையின் வலது பக்கத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடை போன்று கான்கிரீட் கான் கட்டி மீதமுள்ள இடத்தில் மண் நிரப்பி சாலை அமைத்தால் கனரக வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சென்று விடும். இதனால் தற்போது உள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட முடியும். நடுவக்குறிச்சியில் இருந்து மேளமடம் சந்திப்பு வரை பஸ் சென்றுவர 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

    எனவே புதியம்புத்தூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அரசிடம் தெரிவித்து நிதி பெற்று இந்த போக்குவரத்து நெருக்குடிக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×