search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loudspeaker"

    • புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
    • கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பிரித்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது. இந்த பொருட்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என பொருள் உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தேவனாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த பொருட்களை எடுத்து இருக்கலாம் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தில் இதுகுறித்து போலீசார் தெரிவித்தனர். மீனவ பஞ்சாயத்தார் இதுகுறித்து இன்று ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி தெரு தெருவாக அந்த பொருட்களை யாராவது எடுத்து இருந்தால் அதே இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    நமது ஊர் கடற்கரையில் புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் இருந்து காணாமல் போன பொருட்களை எடுத்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் சென்று வைத்து விடுங்கள் . போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் ஊர் நிர்வாகம் இதற்கு பொறுப்பாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தனர்.

    • மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லடம் நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை -திருச்சி ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக செல்ல 45 வினாடிகளும், அதேபோல கிழக்கிலிருந்து மேற்காக செல்ல 45 வினாடிகளும் அனைத்து வாகனங்களும் செல்ல அமைக்கப்பட்டு இருந்தது.

    அதுபோல மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெரிய நகரங்களில் உள்ளது போல் முதல் 25 வினாடிகளுக்கு நேராக செல்லும் வாகனங்களுக்கும், கடைசி 20 வினாடிகளுக்கு பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களும் செல்ல சிக்னல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்துவதற்காக நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் சிக்னல் குறித்து அறிவித்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:- பெரிய நகரங்களில் உள்ளது போல் தற்பொழுது பல்லடத்திலும் சிக்னல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேராகச் செல்லும் வாகனங்களுக்கு 25 வினாடிகளும், பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு 20 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் 2 வழிகளிலும் ஒரே நேரத்தில் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய நடைமுறையை பின்பற்றி பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பேருந்து பயணிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    • பயணிகள் சிரமமின்றி பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்த நடத்துனர் ஈஸ்வரமூர்த்தி , தனது சொந்த செலவில் ஒலிபெருக்கியை வாங்கி பஸ்சின் முன் வைத்துள்ளார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 9.50 மணிக்கு கோபியில் இருந்து திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பேருந்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். பேருந்து நிலையம் என்றாலே அதிக அளவில் பேருந்து ஹாரன் சத்தம் இருக்கும், மேலும் கூட்ட நெரிசலும் காணப்படும்.

    இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அதிக அளவில் சத்தம் போட்டு தங்களது வழித்தடத்தை சொன்னாலும் பலருக்கு தெரியாமல் போகிறது.

    இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பயணிகள் சிரமமின்றி பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்த நடத்துனர் ஈஸ்வரமூர்த்தி , தனது சொந்த செலவில் ஒலிபெருக்கியை வாங்கி அதை பஸ்சின் முன் வைத்துள்ளார்.

    அந்த ஒலிபெருக்கியில் கோபி, திருப்பூர், மதுரை பைபாஸ், தூத்துக்குடி, திருச்செந்தூர் என்று தெளிவாக உச்சரிக்கப்படுவதால் பேருந்து பயணிகள் பலருக்கும் இது உதவும் வகையில் உள்ளது. நடத்துனரின் இத்தகைய செயலுக்கு பேருந்து பயணிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • தஞ்சை காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு மக்கள் பலகாரம் செய்தல், புத்தாடை வாங்குதல், வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குதல், பட்டாசு வாங்குவது, உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர் முறைகளை செய்தல் உள்ளிட்ட பணிகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இதற்கு தேவையான பொருட்களை வாங்கவும் மக்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் தயார் செய்யப்பட்ட புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் தஞ்சாவூர் நகர பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

    கடந்த சில நாட்களாக தஞ்சையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. தஞ்சை காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு புத்தாடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே உள்ளதால் வரக்கூடிய நாட்களில் இன்னும் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×