சாத்தான்குளம் பஜாரில் போக்குவரத்து நெருக்கடி-வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
பஜாரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
பஜாரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பஜாரில் மேலசாத்தான்குளம் ரோடு, இட்டமொழி ரோடு, நாசரேத் ரோடு, முதலூர் ரோடு மற்றும் வாசக சாலை பஜார் உள்ளிட்ட சாலைகளில் தினசரி சிறிய வாகனங்களும் கனரக வாகனங்களும் சென்று வந்து கொண்டிருக்கிறது.

இப்பஜார்களில் இருபுறமும் வியாபார கடைகள் உள்ளன. புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. அனைத்து பஜார்களிலும் வியாபார கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சென்றால் இரு பக்கமும் வாகனங்கள் சூழ்ந்து கொண்டு வெளியேவர முடியாத சூழ்நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து நகர ம.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வாசக சாலை பஜாரில் இருந்து முதலூர் ரோடு வரையிலும் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சந்தித்து இடது பக்கமும் வலது பக்கம் சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், சாத்தான்குளம் வாசசாலை பஜாரில் இருந்து குமரி மாவட்ட பஸ்களும் வாகனங்களும் மற்றும் முதலூர், உவரி,திசையன்விளை வரை உடன்குடி, பெரியதாழை போன்ற ஊர்களுக்கும் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. முதலில் இந்த பஜார்களில் வாகனங்களை போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com