search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சி.

    செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
    • எதிர்ப்பால் பணிகள் நிறுத்தப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான ஆரம்பப்ப பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.

    இப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் செல்போன் டவர் அமைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு செல்போன் டவர் அமைக்கும் ஆரம்ப பணிகள் நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×