என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கேஜ் மிஷின்"

    • வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.
    • நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.

    உலகத்தரத்தில் நமது பிராண்டிங் பேக்கேஜை உருவாக்கி, துரிதமாக நம் தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுப்பொருள்களை சந்தைப்படுத்த முடியும் என வழிகாட்டுகிறார் மதுரை ஷேப்பர்ஸ் பேக்கேஜிங் டிசைன் ஸ்டுடியோஷ் நிறுவனர் அஸ்வின்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " பேக்கேஜிங் என்பது டிசைன் மட்டுமல்ல. ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான். 1500 பொருள்களுக்கு மேல் நாங்க பேக்கேஜிங் செய்து கொடுத்துள்ளோம். வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.

    அதைத் தான் நாங்கள் ஸ்டேடர்ஜி பேக்கேஜிங், எமோஷனல் பேக்கேஜிங், ஸ்டோரி பேக்கேஜிங் என வகைப்படுத்தி வடிவமைக்கிறோம்.

    உதாரணமாக பஜ்ஜி மாவு பாக்கெட்டில், தேனீர்க்கடைக்காரர் படத்தை வடிவமைக்கிறோம். இதனால்,பலகாரக் கடைக்காரர்களால் இந்த மாவு எளிதாக அடையாளம் காணப்படுகிறது. அதேபோல், ஒரு பொருள் விற்கப்படும் பகுதியைக் குறிப்பிடும் படங்களையும் தேர்ந்தெடுத்து பாக்கெட்டில் பொறிக்கிறோம். இது தான் டார்கெட் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.

    அதேபோல், ஒரு மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் போது, பேக்கேஜில் மூலப்பொருளின் படம் பொறித்து சந்தைப்படுத்துகிறோம். உதாரணமாக வாழைப்பூ மூலமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் பாக்கெட்டில் வாழைப்பூவின் படத்தை அச்சிடுகிறோம். அதேபோல், அந்த பாக்கெட்டை செவ்வாழை நிறத்திலேயே உருவாக்குகிறோம். இது, பொருள்களை எளிதாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும்.

    மேலும், வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் பாக்கெட்டுகளில், உணர்வுரீதியான ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தினர் சேர்ந்து திண்பண்டங்கள் தயாரிப்பது போன்ற ஓவியங்களை பயன்படுத்துகிறோம். இவ்வாறாக, உலகத்தரத்தில் உங்கள் பிராண்டிங் பேக்கேஜை உருவாக்க சிறந்த யோசனைகளை, வழிமுறைகளை வழங்கிட காத்திருக்கிறோம்.

    முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை.

    மதுரை

    தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை. எனவே ஜெயிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    எனவே மதுரை மத்திய ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை மத்திய ஜெயிலுக்குள் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த படியாக சிறைவாசிகளுக்கு இன்டர்காம் நேர்காணல் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் புதிதாக ஒரு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கைதிகளின் உடைமைகளை சோதனை செய்யும் வகையில் அதிநவீன சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று டி.ஜிபி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் மற்றும் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கருவிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயில் நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மதுரை மத்திய ஜெயிலில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் செயல்பாட்டை, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு உள்ளது. இது கைதிகளின் உடமைகளை துல்லியமாக பரிசோதனை செய்யும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முயன்றால், அதனை இந்த அதிநவீன எந்திரம் உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜெயிலுக்குள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்படும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×