என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபுணர்"

    • வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.
    • நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.

    உலகத்தரத்தில் நமது பிராண்டிங் பேக்கேஜை உருவாக்கி, துரிதமாக நம் தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுப்பொருள்களை சந்தைப்படுத்த முடியும் என வழிகாட்டுகிறார் மதுரை ஷேப்பர்ஸ் பேக்கேஜிங் டிசைன் ஸ்டுடியோஷ் நிறுவனர் அஸ்வின்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " பேக்கேஜிங் என்பது டிசைன் மட்டுமல்ல. ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான். 1500 பொருள்களுக்கு மேல் நாங்க பேக்கேஜிங் செய்து கொடுத்துள்ளோம். வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.

    அதைத் தான் நாங்கள் ஸ்டேடர்ஜி பேக்கேஜிங், எமோஷனல் பேக்கேஜிங், ஸ்டோரி பேக்கேஜிங் என வகைப்படுத்தி வடிவமைக்கிறோம்.

    உதாரணமாக பஜ்ஜி மாவு பாக்கெட்டில், தேனீர்க்கடைக்காரர் படத்தை வடிவமைக்கிறோம். இதனால்,பலகாரக் கடைக்காரர்களால் இந்த மாவு எளிதாக அடையாளம் காணப்படுகிறது. அதேபோல், ஒரு பொருள் விற்கப்படும் பகுதியைக் குறிப்பிடும் படங்களையும் தேர்ந்தெடுத்து பாக்கெட்டில் பொறிக்கிறோம். இது தான் டார்கெட் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.

    அதேபோல், ஒரு மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் போது, பேக்கேஜில் மூலப்பொருளின் படம் பொறித்து சந்தைப்படுத்துகிறோம். உதாரணமாக வாழைப்பூ மூலமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் பாக்கெட்டில் வாழைப்பூவின் படத்தை அச்சிடுகிறோம். அதேபோல், அந்த பாக்கெட்டை செவ்வாழை நிறத்திலேயே உருவாக்குகிறோம். இது, பொருள்களை எளிதாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும்.

    மேலும், வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் பாக்கெட்டுகளில், உணர்வுரீதியான ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தினர் சேர்ந்து திண்பண்டங்கள் தயாரிப்பது போன்ற ஓவியங்களை பயன்படுத்துகிறோம். இவ்வாறாக, உலகத்தரத்தில் உங்கள் பிராண்டிங் பேக்கேஜை உருவாக்க சிறந்த யோசனைகளை, வழிமுறைகளை வழங்கிட காத்திருக்கிறோம்.

    முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாரி ஹூஃப்க்ளோப்பன் என்ற அந்த நபருக்குத் தனது உடம்பில் கூடுதலாக நிப்பிள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என அவர் செயற்கை முறையில் உடலில் மாற்றம் செய்யும் நிபுணரான ஸ்டீவ் ஹாவொர்த்தை அணுகியுள்ளார். அதன்படி ஸ்டீவ் இயற்கையான ஆண் நிப்பிள்களைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நான்கு சிலிகான் நிப்பிள்களை ஹாரியின் உடம்பில் பொருத்த்தியுள்ளார்.

    அதன்பின் அறுவை சிகிச்சை காயங்கள் குணமடைந்த பின் கொலராடோவைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல் என்பவரிடம் சென்ற ஹாரி, தனது உடம்பில் புதிதாக பொறுத்தப்படுத்த சிலிகான் நிப்பில்கள் இயற்கையாகத் தோன்றும் வகையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.




     



    ஹாரியின் வீடியோவை பகிர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல், இந்த செயல்முறை மிகவும் எளிதான, சிக்கலற்ற முறைதான் என்று விளக்கினார். இது வினோதமாகத் தோன்றினாலும் இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு ஹாரியின் உடலில் கூடுதலாக உள்ள 4 நிப்பிள்கள் காண்போருக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது.

    • இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்க ஏற்பாடு
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் எம்.பி. விஜயகுமார் வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியா குமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு எம்.பி. விஜயகுமார் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்துரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகு மார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிமோட் மூலம் ஏற்றினார். இந்தநிலையில் கன்னியாகுமரி பகுதியில் நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றினால் ஒரே நாளில் இந்த கொடி சேதம் அடைந்தது. சூறைக்காற்றில் இந்த தேசியக்கொடி சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடியின் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற பகுதியில் பச்சை நிற பகுதிசேதமடைந்து கொடிய கிழிய தொடங்கி உள்ளது. அதேபோல் மேல் புறமும் லேசாக சேதம் அடைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடியை நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர். அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் தற்போது 150 அடி உயரது கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு கன்னியாகுமரிக்கு வருகைதரஉள்ளது.

    இந்த குழு வந்து ஆய்வு செய்த பின்னரே அடுத்த தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கு சிலநாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறப்பதை பார்க்க கன்னியாகுமரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ×