என் மலர்
நீங்கள் தேடியது "Police Dead"
- போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
- முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்
நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.
காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
- குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார்.
- மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லோட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள், போலீசார் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறும் போது, நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்த சில ஹீரோக்களை இன்று நாம் இழந்து விட்டோம். குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.
அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றவாளியாகத் தேடப்படுபவர். மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் லீய்ஜ் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது.







