என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐயோ பாவம்..!- ஈரோடு விஜய் பிரசாரம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்
- விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
- திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.
தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.
விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.
செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.
திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






