என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சார பொதுக்கூட்டம்"

    • தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
    • எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-

    எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..

    என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.

    தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.

    என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 4 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்தது
    • எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    மத்திய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இது குறித்து பரப்புரை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. தொழிற் சங்க துணைச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குலாம் மைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தொழிற்சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

    ×