search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    வல்லம் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வல்லத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • சொத்துவரி, மின் கட்டணம், பால் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வுகளை கண்டித்து வல்லம் பேரூராட்சி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையம் எதிரே வல்லம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தஞ்சை திருவாரூர் மாவட்ட பால்வளத் தலைவர் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிக்கல்சன் வங்கி கூட்டுறவு தலைவர் சரவணன், முன்னாள் வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் சிங் ஜெகதீசன், பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகரன் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சிங்.ஜெ. முருகானந்தம், கவிதாகலியமூர்த்தி, வட்ட செயலாளர் மனோகரன், வல்லம் அதிமுக வார்டு செயலாளர்கள், அறிவு, மில்டன், அறிவு, சுந்தரம், வாசு, நேரு, சேட்டு நிர்வாகிகள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்ப பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    Next Story
    ×