search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peace meeting"

    • பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
    • நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு காவலர் ஹரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை 45 நாட்களுக்குள் உறுதியாக இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செல்வகுமரன், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஆன்மிகம் மற்றும்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் வினோத் சுப்பையன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, கல்யானகுமார், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மினி பஸ்களில் ஏறிய பயணிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்ற அழைக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் மினி பஸ்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முறையாக இயங்கவில்லை எனக் கூறி ரெயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் மினிபஸ் உரிமையாளர்கள், ரெயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மினிபஸ்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வழித்தடங்கள், நேரங்களில் வாகனங்களை இயக்க வேண்டும், ரெயில்வே துறையால் அனுமதி வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்சா வாகனங்கள் மட்டுமே ரெயில்வே பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க வேண்டும். மினி பஸ்களில் ஏறிய பயணிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்ற அழைக்கக் கூடாது.

    முறையான ஆவணங்கள், முறையான கட்டணம் வசூலித்து விதிமீறல் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும். கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் சிவகிரி அருகே ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி தொடர்பாக தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    ராயகிரி பாகம் -1 கிராமத்தில் மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாற்று சாலை போக்குவரத்து வசதிகள் செய்து தராமல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் விஸ்வநாதபேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம் வழியாக ராயகிரி செல்லும் சாலையில் சுமார் இரண்டு மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    ராயகிரி, ராமநாதபுரம், அருளாட்சி மற்றும் ராயகிரி வழியாக துரைச்சாமியாபுரம், சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உள்ளார் சாலை வழியாக சென்று வந்தன. இதனால் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    ஆகவே இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவகிரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறி யாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடுவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப்பாதை 10 நாட்களுக்குள் அமைத்துத் தருவதாக உறுதிமொழி கடிதம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சிவகிரி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாலம் கட்டவும், போக்கு வரத்திற்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்துமாறு தெரிவி க்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நிரந்தரமாக இப்போராட்டம் வாபஸ் பெறப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) கணேஷ், மண்டல துணை தாசில்தார் சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சமுத்திரகனி, வேலு, ராஜேந்திரன், மணிகண்டன், சின்ன வேல்சாமி, சொரிமுத்து, அய்யாசாமி, பேரூராட்சி கவுன்சிலர் இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி டாஸ்மாக் கடை 2 மாதத்துக்குள் அகற்றப்படும் என சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
    • 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூறி பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து கீழக்கரை தாசில்தார் சரவணன் ஏற்பாட்டில் சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் திருப்பு ல்லாணி கோவில் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எஸ்.டி. பி.ஐ. கட்சி நிர்வாகிகள் விளக்கினர். இறைத்தொடர்ந்து 2மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள் வதாக டாஸ்மாக் தாசில் தார் சேதுராமன் உறுதி அளித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர்.

    இதில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார், கோட்ட ஆய அலுவலர் கல்யாண குமார் கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் பெரியபட்டினம் தலைவர் முகமது மீராசா, பொரு ளாளர் சையது இப்ராம்ஷா, கீழக்கரை நிர்வாகிகள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.
    • மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அங்குள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.

    இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கொடி கம்பத்தை வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திர மூலம் இடித்து அகற்றினர்.

    • 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    • வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு தர்மக்குடிகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் இருக்கின்ற அனைத்து கழிவுநீர்களையும் தர்மகுடிகாடு பகுதி வழியாக கொண்டு சென்று வெள்ளாற்றில் கலக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலந்து சென்றனர். திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் திட்டக்குடி நகராட்சியிடம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி தர கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர துணைத் தலைவர் பரமகுரு மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வடிக்கால் வழியாக தர்மக்குடிகாட்டில் இருந்து வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு உட்பட்ட அப்பகுதி மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் நவீன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட க்காரர்கள் தற்போது தற்காலிகமாக இந்த வழியாக பள்ளம் தோண்டப்பட்டால் விரைவில் திட்டக்குடி நகராட்சி சாக்கடை நீர் அனைத்தும் இவ் வழியாக தான் அருகிலுள்ள வெள்ளா ற்றிக்கு செல்லும் எனவே இவ்வழியாக வடிகால் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் தற்போது பருவ மழை தொடங்கிய தால் சாலை ஓரம் உள்ள மழை நீரை மட்டும் செல்வதற்கு தற்காலிகமாக பள்ளம் தோண்டி வெள்ளா ற்றில் மழை நீரை விடுவதாக தெரிவித்தனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவி த்ததால் இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக த்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என டிஎஸ்பி காவியா தெரிவி த்தார். இதையடுத்து போராட்ட க்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காக கூட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்தை சேர்ந்த வடுகபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலணியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள எரிமேடையால் இப்பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சார்ந்த மக்களுக்கு ஏற்படும் சவுகரியங்களை கருத்திற்கொண்டு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் வகையிலும்,

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காகவும், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் மனோகரன், மண்டல துணைத் தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், ராயகிரி நகர பஞ்சாயத்து இளநிலை உதவியாளர் பத்திரகாளி, கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி, உதவியாளர் மலைக்கனி, ஆகியோர் உள்பட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சிவனுப்பாண்டி, பாண்டி ஆகியோரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தமிழன், முனியாண்டி, மாரியப்பன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடுகபட்டியில் ஆதிதிராவிடர் காலனியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பயன்படுத்திவரும் எரிமேடையால் மற்றொரு சமுதாயத்தினரின் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சுகாதார கேடுகளையும் கருத்திற்கொண்டு,

    தற்போது எரிமேடையை பயன்படுத்தி வருகின்ற சமுதாயத்தினர் இதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய எரிமேடையை ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள எரிமேடையை அப்பறப்படுத்திக் கொள்வது எனவும் ஒப்புக் கொண்டனர். இதனை மற்றொரு சமுதாயத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

    பழைய எரிமேடையை உடனடியாக சீரமைக்கவும், சீரமைத்த பின்னர் தற்போது உள்ள எரிமேடையை அகற்றவும் ராயகிரி நகர பஞ்சாயத்து மூலம் விரைந்து செயல் படுத்துவது எனவும், ராயகிரி நகரப பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் மயானம் எரிமேடைகள் அமைந்துள்ள நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், மேற்படி பகுதியில் அமைந்துள்ள அடிபம்பினை அவ்வப்போது பழுது பார்த்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும்,

    இவற்றிற்காக ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×