search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை டெஸ்ட் பர்சேஸ் முறையை நடைமுறைபடுத்த மாட்டோம் - அமைச்சர் என உறுதி
    X

     ஏ.எம். விக்ரமராஜா.

    முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை டெஸ்ட் பர்சேஸ் முறையை நடைமுறைபடுத்த மாட்டோம் - அமைச்சர் என உறுதி

    • அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை நடைமுறை படுத்த மாட்டோம்

    சுவாமிமலை:

    அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி சட்டையில் பேட்ச் அணிந்து மற்றும் கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முதல் கட்ட ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவை அழைத்து பேசி டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும், சிறு குறு வணிகர்களையும் எவ்வகையிலும் பாதிக்க மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்கள்.

    இதற்காக டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர்முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவ தலைவர்அசோகன், முதன்மை துணைத் தலைவர்கள் ஜமால்முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜாமைதீன் , துணைத் தலைவர்கள் சரவணன், செல்வசேகர், ஜாகிர் உசேன், கணேசன்மூர்த்தி, துணைச் செயலாளர்கள், ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர் அலி, இணைச் செயலாளர்கள், பிரபாகரன்,பாலமுருகன், கரிகாலன், ஒருங்கிணை ப்பாளர்,சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர், கருணாகரன், செய்தி தொடர்பாளர், லுக்மான் உமர், ஆகியோர் சார்பாகவும் மற்றும் வணிக அனைத்து உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    Next Story
    ×