என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு
- துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
- அ.தி.மு.க. கவுன்சிலர் ஆணையரிடம் ெதரிவித்தார்
திருச்சி:
திருச்சி துவாக்குடி நகராட்சியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆணையாளர் கேட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நகராட்சியின் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் சாருமதி ஆணையாளரிடம் ஒரு ஆட்சேபனை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
துவாக்குடி நகராட்சியில் உள்ள 1 முதல் 21 வரை உள்ள அனைத்து வார்டுகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க இருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால் எனது வார்டுக்கு உட்பட்ட செடிமலை முருகன் கோவில் தெருவில் பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள்.
இங்கு பொது கழிப்பிட வசதி சரியாக இல்லை. இருக்கும் ஒரு பொதுக் கழிப்பிடத்தையும் நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்