search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறம்போக்கு வீடுகள்"

    • அணைப்புதுார் மற்றும் சுள்ளிக்காடு பகுதியில், 130 வீடுகள்நல்லாறு ஓடை புறம்போக்கில் உள்ளன.
    • கூப்பிடு விநாயகர் கோவில் அருகில் 228 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது.

    அவிநாசி:

    ஓடைப்புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அவிநாசி வருவாய்த்துறை சார்பில், ஓடை புறம்போக்கில் உள்ள வீடுகள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள வீடுகள் அகற்றப்படுவதுடன், அங்கு வசித்த குடியிருப்புவாசிகளுக்கு மாற்றிடம் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

    இதில் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அணைப்புதுார் மற்றும் சுள்ளிக்காடு பகுதியில், 130 வீடுகள்நல்லாறு ஓடை புறம்போக்கில் உள்ளன. அவற்றை காலி செய்ய நீர்வளத்துறையினர் சார்பில், நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டும் காலி செய்யவில்லை.இதனால், தாசில்தார் ராகவி மற்றும் வருவாய் துறையினர், குடியிருப்புவாசிகளை சந்தித்து, ஓடை புறம்போக்கில் வசிப்பது. பாதுகாப்பற்றது என்றிருந்தாலும் ஒரு நாள், காலி செய்தே ஆக வேண்டிய நிலை வரும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்என்றனர். அதனை குடியிருப்புவாசிகளும் ஏற்று கொண்டனர்.

    இது குறித்துவருவாய்த்துறையினர் கூறுகையில்,89குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய முன்வந்துள்ளனர். பூண்டியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு வீடு ஒதுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எஞ்சியோரில் சிலருக்கு வேறு இடத்தில் வீடுகள் இருந்தும், அவர்கள் வெளியேற தயங்குகின்றனர்.அவர்களும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை எதிர்பார்க்கின்றனர். இவர்களை தவிர தகுதியுள்ளமற்றவர்களுக்கும் மாற்றிடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றனர்.

    திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், கூப்பிடு விநாயகர் கோவில் அருகில் 228 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. மொத்தம் 18.8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணி இம்மாதம் இறுதியில் நிறைவு பெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 8.39 லட்சம் .பயனாளிகள் தங்களின் பங்களிப்பு தொகையாக 89 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×