search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "underground"

    • நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகரசபை தலைவர் முத்து துரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ்மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரை யாற்றினர்.

    புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ெபரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவ மைக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றார்.

    அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி களுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பார்வையிட்டார்
    • ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    திருக்கயிலாயப் பரம் பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான சீர்காழியில் உள்ள சட்டநாத சாமி தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சாமி கோவில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோவில் கும்பாபிஷேகப் பணியின் போது கோவில் வளாகத்தில் பூமிக்கடியில் இருந்து 22 பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் 412 முழுமையாகவும் 84 உடைந்த நிலையில் தேவார செப்பேடு தொகுதிகள் கிடைக்கப் பெற்றன.கோவிலில் கண்டெடுக் கப்பட்ட பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் செப்பேடுகளை புதுவை மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகளுடன் சென்று பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

    பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோவிலில் கண்டெடுக் கப்பட்ட ஐம்பொன் சிலைகளும் செப்பேடுகளும் மத்திய அரசின் அனுமதி பெற்று கோவில் வளாகத்திலேயே வைத்து வழிபடவும் இவற்றை தருமபுர ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம் , புதுவை மாநில பா.ஜனதா துணை தலைவர் அருள்முருகன், அப்பு மணிகண்டன், சிவக்குமார் ,அறிவழகன் மற்றும் ஏராளமான பா.ஜன தாவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கீழடி அகழ்வாராய்ச்சியால் கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
    • கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மானாமதுரை, மார்ச்.5-

    சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியால் தற்போது இந்த பகுதியில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை உலகில் அனைவரும் தெரிந்து கொள்ள அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்து கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, மணலூர்ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இங்கு கிடைத்த அரிய பொருள்களை தமிழக மக்கள் அனைத்து பகுதி களிலும் இருந்து பார்க்கும் வகையில் சுமார் ரூ.18 கோடி செலவில் தமிழக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாக கீழடி அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திருக்கரங்கலால் இன்று மாலை இது திறக்கப் படுகிறது. இதுதவிர தமிழகத்தில் இன்னும் பலகிராம ஊராட்சி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிநடைபெற்றுவருகிறது. இந்த பணிகளால் கீழடி பகுதியில் புதியதார்சாலை, சிமெண்டு சாலை, பள்ளி களில் மேம்பாடுவசதி, கூடுதல் போக்குவரத்து வசதிகள் கிடைத்தன.

    மேலும் கீழடி ஊராட்சி தமிழகத்தின் சுற்றுலா தலமாக மாறி வருகிறது என்று கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார்.
    வேலூர்:

    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார். அவர் போலியான வீட்டு முகவரி கொடுத்துள்ளது தெரியவந்ததால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற பாப்பண்ணா (வயது 45). இவரை கடந்த 1999-ம் ஆண்டு மத்திகிரி பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தளி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாப்பண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த பாப்பண்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவி சகாயமேரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்து விட்டு வருவதற்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாப்பண்ணாவை கடந்த 28-ந் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பரோலில் வெளியே செல்ல உத்தரவிட்டார். அதையடுத்து அவர் ஜெயிலில் இருந்து வெளியே சென்றார். கடந்த 4-ந் தேதி மாலை பரோல் முடிந்து மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஜெயிலுக்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து வேலூர் மத்திய ஜெயில் உதவி சூப்பிரண்டு முருகசேன் தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தளி போலீசார், உதவி சூப்பிரண்டு அளித்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்த சென்றனர்.

    அப்போது பாப்பண்ணா பரோலில் வர விண்ணப்பித்தபோது அளித்த வீட்டின் முகவரி போலியானது எனவும், போலியான முகவரியை அவர் கொடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பாப்பண்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர். 
    ×