search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rabid"

    • வெறிபிடித்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை கடித்தது.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்,சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை கடித்ததில் ஆதிலட்சுமி (வயது 50) சக்திவேல் (35), சாதனா( 14), மகாதேவன் (65), ஆகாஷ் (22) நவீன்குமார் (21) உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவ ர்கள் செஞ்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ஒரே நாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெறிநாய் பொதுமக்களை துரத்தி சென்று கடித்தது.
    • இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.

    தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி தொகுதிகளில் தெருநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, மாப்பிள்ளை சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய் ஒன்று துரத்திச்சென்று கடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×