search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
    X

    விருதுநகர் டி.டி.ரோட்டில் கூட்டமாக நிற்கும் நாய்கள். 

    தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

    • விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×