search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alms"

    • நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணை தலைவர் டி.ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தவர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு திருமங்க லத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவ லகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், உணவு பொருட்கள், வேஷ்டி,சேலை உள்ளிட்டவைகளை சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்குகிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார், தாரணி, ஹனிகா, கரிகால் சோழன், வேதாந்த், ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே. செல்வகுமார் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மதுரை சரந்தாங்கி, ஆனையூரில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் அவரது உருவபடத்தை வைத்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

    சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை வி.எம்.எஸ். அழகர் தொடங்கி வைத்தார். இதேபோன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வி.எம்.எஸ். அழகர் வழங்கினார்.

    இந்த விழாக்களில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அக்னிராஜ்,மாவட்ட செயலாளர்கள் கேசவன்,ராஜ்குமார், இளைஞரணி ஆதிமுருகன், அவைத்தலைவர் பிடாரன், மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா, மாநகர பொறுப்பாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் தங்கம், மதுரை மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே தி.மு.க. சார்பில் அன்னதானம் நடந்தது.
    • அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன் ேகாவிலில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழா நடந்தது.

    திருமங்கலம்

    செங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன், முத்தையாசாமி கோவில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழாவை முன்னிட்டு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் லதா அதியமான், திருமங்கலம் நகரச்செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர் திருக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி கோவிலில் அன்னதானம் நடந்தது.
    • குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை கரட்டில் பாலதண்டாயு தபாணி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


    இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி முன்னாள் மாநிலத்தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி வழங்கினார். இதேபோல் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா.
    • நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது.

    புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது.

    மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்தார்.
    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

    16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு பஸ் நிறுத்த பகுதியில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் குலோத்துங்கன், பொன்.ராஜேந்திரன், கார் சேரி கணேசன், வாசு, இளைஞரணி மாநில துணை செயலாளர் பாரி, ஒன்றிய குழு உறுப்பினர் மாயி,பகுதி செயலாளர் செந்தில், சரவணன்,முருகேசன், துணைச் செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நாகரத்தினம், பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலா, வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவனியாபுரம்

    அ.தி.மு.க.51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் ஜி.ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    இதில் ஸ்ரீராம் ரங்கராஜ், ராஜாமணி, ரவி, காளிதாஸ், மார்க்கெட் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மாரியப்பன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, அருண்குமார், முனிபாலன், தனபாண்டி, ஜெயபாண்டி, சுந்தர், குமார், குபேந்திரன், முத்தையா, பிரபு, கண்ணன், அருண்பாண்டி, சாத்தன உடையார், பத்ரி முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா நடைபெற்றது.
    • சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ விச்வசேனர், ஸ்ரீ தேவி -பூ தேவி சமேதாய ஆதிகேசவ பெருமாள் சக்கரயோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சாமி , நவக் கிரஹ மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

    தொடக்க விழாவில் அனங்கூர் பஞ்சாயத்து தலைவர் சிங்காரவேலு தலைமையில் அன்னதானம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×