search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

    • கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
    • கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார் அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வ ரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கன அடி வரை திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப் பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 x 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362 264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×