search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chariot roads"

    • தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
    • ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடுமலை வருகை புரிந்தனர். அப்போது அவர்களிடம் நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து உடுமலை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் உலா வரும் வீதிகளில் 1 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    உடுமலை நகரின் இதயப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் சந்திப்பில் சுற்றுலா தலங்களுக்கு செல்லக் கூடிய சாலை சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் செயற்கை நீரூற்று, புல் தரைகள், பூச்செடிகள் அமைத்து அழகு படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.33 லட்சம் ஒதுக்கித் தர வேண்டும்.

    பழனி, திருமூர்த்திமலை, ஏழுமலையான் கோவில் ஆகிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வாகன நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளவும் இளைப்பாறவும் தற்போது இருக்கும் பேவர் பிளாக் சாலைகளை தரம் உயர்த்தி ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    ×