search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buried wires"

    • தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
    • ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடுமலை வருகை புரிந்தனர். அப்போது அவர்களிடம் நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து உடுமலை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் உலா வரும் வீதிகளில் 1 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தேரோடும் சாலைகளில் மின் கம்பிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்க்க புதை வடக்கம்பிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    உடுமலை நகரின் இதயப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் சந்திப்பில் சுற்றுலா தலங்களுக்கு செல்லக் கூடிய சாலை சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் செயற்கை நீரூற்று, புல் தரைகள், பூச்செடிகள் அமைத்து அழகு படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.33 லட்சம் ஒதுக்கித் தர வேண்டும்.

    பழனி, திருமூர்த்திமலை, ஏழுமலையான் கோவில் ஆகிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வாகன நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளவும் இளைப்பாறவும் தற்போது இருக்கும் பேவர் பிளாக் சாலைகளை தரம் உயர்த்தி ரூ.4 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச் சாலைகளாக மேம்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×