search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala shutdown"

    கேரளாவில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் சதாசிவம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. 
     
    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. 

    இதற்கிடையே, நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதுதொடர்பாக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.



    கேரளாவில் வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 300க்கு மேற்பட்டவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
    கேரளாவில் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. #KeralaShutdown #OddanchatramMarket
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தன் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக கேரள மாநிலத்துக்கு 60 சதவீத காய்கறிகள் அனுப்பப்படுகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் பாலக்காடு, திருவனந்தபுரம், செப்பல்சேரி, எடவேலி, மஞ்சரக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து போராட்டம் வெடித்தது. இன்று கேரளாவில் இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

    பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மதியம் சபரிமலை கோவிலுக்கு 2 பெண்கள் சென்று வந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்தனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கேரளாவுக்கு லாரிகள் மூலம் ஏற்றப்பட்ட காய்கறிகள் அனைத்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமலும் அவதிக்குள்ளானார்கள்.

    மிளகாய் ஒரு கிலோவுக்கு ரூ.15, முருங்கை ரூ.55, வெண்டைக்காய் ரூ.15, பீன்ஸ் ரூ.8, வெங்காயம் ரூ.15, பீட்ரூட் ரூ. 8, கொத்தவரை ரூ.8, பூசணி ரூ.7, சுரைக்காய் ரூ.2, பல்லாரி வெங்காயம் ரூ.15, நெல்லிக்காய் ரூ.20, வாழைத்தார் ரூ.18 என்ற விலையில் விற்பனையானது.

    காய்கறிகள் தேக்கமடைந்ததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கேரளாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் இன்றும் காய்கறிகள் அனுப்பப்படுமா? என்று தெரிய வில்லை. எனவே விவசாயிகள் பெரும்பாலும் காய்கறிகள் கொண்டு வருவதை தவிர்த்து வருகின்றனர்.  #KeralaShutdown #OddanchatramMarket


    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    ×