search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Protest"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
    • விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த வாக்குறுதியும் மக்களின் பெரும் கோபத்திற்கும் ஏமாற்றத்திற்கும் இடையே பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்படுகிறது.

    பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத் தலைவிகளாகிவிட்ட 18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களை குடும்பத் தலைவிகளாக அங்கீகரிக்க இந்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சுற்றுப்பகுதிகளிலும் திறனற்ற தி.மு.க. அரசின் திடீர் தகுதி அறிவிப்பால் ஏமாற்றமடைந்த ஏழை கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பெருங்கோட்டப் பொறுப்பாளர் வினோத் பி.செல்வம், ஒருங்கிணைப்பில் திண்டிவனம், விழுப்புரம் பண்ருட்டி கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.
    • தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.

    திருச்சி:

    சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று பாஜகவினர் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் அங்கு திரண்டனர்.

    ஏற்கனவே பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது,

    சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.

    சனாதனத்தில் இருக்கும் 4 வர்ணங்களையும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி.

    ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்கிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. அதனை அளவீடு செய்வது யார்?

    புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்துள்ளது.

    திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
    • முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் வினோத், சுரேஷ், பிச்சைப்பிள்ளை, மேகநாதன், மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன், ஸ்ரீதர், பிரபு மற்றும் நிர்வாகிகள் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரண்டனர்.

    பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. ஆகையால் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நின்று கோஷம் எழுப்பி விட்டு செல்கிறோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதற்கும் போலீசார் அனுமதி அளிக்காததால் ஒரு சில பா.ஜ.க.வினர் தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் எதிராக கண்டனம் கோஷம் எழுப்பினர்.

    போலீசார் அனுமதி வழங்கவிட்டாலும் எங்கள் முற்றுகை போராட்டம் தொடரும் என கூறிக்கொண்டு இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு அவசர அவசரமாக சென்று தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதில் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

    மேலும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென்று புதுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கிருந்த போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகள் 100 பேரை கைது செய்தனர். அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். பா.ஜ.க.வினரின் போராட்டத்தில் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    10-ந்தேதிக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் 11-ந்தேதி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.

    இதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கில் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, நெல்லை தெற்கு மீனாதேவ், நெல்லை வடக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தென்காசி-நீலமுரளி யாதவ், மதுரை-ராமசீனிவாசன், திருச்சி-எச்.ராஜா, பெரம்பலூர்-தடா பெரியசாமி, மயிலாடுதுறை-ஆதவன், திருவாரூர்-முருகானந்தம், கடலூர்-அஸ்வத்தாமன் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி காந்த், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் அஸ்வின் ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய பா.ஜ.க. சார்பாக பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பாச்சலூர் கிளை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் பசுபதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒன்றிய உறுப்பினர் அர்ஜுணன் நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார்.
    • திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை:

    மேகதாது அணை விவகாரம், கனிமவள கொள்ளை, டாஸ்மாக் கடைகளை மூடுதல், சட்டம்-ஒழுங்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் 120வது வட்டத் தலைவர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சுமோ சுரேஷ், மீனவர் பிரிவு மாநில செயலாளர் பிரேம்குமார், திருவல்லிக்கேணி தெற்கு மண்டல் தலைவர் முனுசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

    • தொகுதி தலைவர் கே.பி. சண்முகம் தலைமையில் நடந்தது
    • தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தமிழகத்தின் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வானூர் ஒன்றிய தலைவர் கே.பி. சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே. ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் நிர்வாகிகள் சிவலிங்கம் ஆதிமுத்து லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வழங்க உள்ள பெண்களுக்கான உரிமை தொகையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஆளும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    கஞ்சா கள்ளச்சாராய, விற்பனையை அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    னதா நிர்வாகிகள் ஜீவா, குப்புசாமி, அய்யனார், மேகநாதன் ரமேஷ், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரு.நாகராஜன், குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அண்ணாமலை மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, திமுக அரசை விமர்சனம் செய்தார். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகக்கு மட்டும்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

    துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேசியதாவது:-

    அண்ணாமலை போன்ற இமாலய தலைவர் மீது வழக்கு போட்டால் மிரண்டு போய் அறையில் உட்கார்ந்துவிடுவார் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் அது தவறு. 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டது நீங்கள். ஆனால் நாகர்கோவிலில் போய் பயந்து உளறியது யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    வழக்கு போட்ட இரண்டாவது நாள் நாகர்கோவிலுக்கு சென்று பேசிய அவர், 'ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்' என்றார். யார் ஆட்சியை கலைக்கப் பார்த்தது? நமது தலைவர்கள் யாராவது அப்படி சொன்னார்களா?

    திமுக ஆட்சியை இரண்டு முறை ஆட்சியில் இருந்து துரத்திய காங்கிரசோடு கூட்டு சேர்ந்துகொண்டு ஆட்சிக் கலைப்பு பற்றி இவர் பேசுகிறார். எங்கள் தலைவர் மீது 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டுவிட்டு, 356ஐ கண்டு பயந்துபோய் நாகர்கோவிலில் பேசுகிறீர்கள். இது வெட்கக்கேடான விஷயம்.

    எதாவது சொல்லி மக்களை குழப்பவேண்டும், மக்களை தூண்டி விட வேண்டும், மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்காயவேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

    • மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது.
    • மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சி.பி.ராதா கிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்து ஆலயங்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம். நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும்.

    4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது. மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உரிய பணியிடங்களை உரிய விதிமுறைப்படி நிரப்ப வேண்டும்.

    கோவில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

    உண்ணாவிரதத்தில் மாநில செயலாளர் வினோத் ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், ஹேமமாலினி, ரங்கராஜ், முருகேசன், குருஜி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் நாச்சிகுப்பம் சரவணன், சென்னை மேற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொன்.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாய அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது
    • தமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை

    தென்னை விவசாயி–களை காக்க பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    தேங்காய் வழங்க வேண்டும். அதனால் தேங்காய் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணை வினியோகம் செய்ய வேண்டும்.

    பல்வேறு இடர்பா டுகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்றதமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும்.
    • நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    கோவை:

    தென்னை விவசாயிகளை காக்க பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதனால் தேங்காய் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    பல்வேறு இடர்பாடுகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்ற தமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×