என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gulam Nabi Azad"

    • அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும்.
    • நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.

    பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது, அரசுக்கு சட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற விவகாரத்தை துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

    அவை செயல்படுவதற்கு இடையூறு செய்வதை நான் எதிர்க்கிறேன். நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.

    பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்பாக தேசிய, சர்வதேச, உள்நாட்டு பிரச்சினைகளை எழுப்புவீர்கள் என்பதுதான் அவைக்குள் நுழைவதற்கான அர்த்தம். அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும். ஆகவே, வெளிநடப்பு அரசுக்கு உதவுவதாகவே இருக்கும். அவர்களுக்கு எதிராக இருக்காது.

    இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
    • தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.

    அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #KarunanidhiUnwell #KauveryHospital #GhulamNabiAzad
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.



    அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

    பின்னா குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தோம். அவர் ஐசியு வார்டில் உள்ளார். அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும்  சிகிச்சை குடும்பத்தினருக்கு திருப்தி அளித்துள்ளது. அவர் சில தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று நம்புவோம். இதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

    இவ்வாறுஅவர் கூறினார்.  #KarunanidhiUnwell #KauveryHospital #GhulamNabiAzad
    ×