search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "schools closed"

    • வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
    • கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

    டெல்லி:

    வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக, மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.

    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது.

    வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, மாவட்டத்தில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.

    எனவே, நான், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144ன் கீழ், பாட்னா மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின்(முன்பள்ளி மற்றும் அங்கன்வாரி மையங்கள் உட்பட) கல்வி நடவடிக்கைகளை 28.06.2023 வரை தடை செய்கிறேன்.

    மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவு 26.06.2023 மற்றும் 28.06.2023 வரை அமலில் இருக்கும். 24.06.2023 அன்று எனது கையொப்பம் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
    • மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆக உள்ளது.

    இம்பால் :

    மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

    மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுவதையடுத்து காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையடுத்து  பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    இதேபோன்று பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால்  சர்வதேச விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed

    தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். #HeavyRain
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். #HeavyRain
    இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு நீடிப்பதால் மூன்று மாவட்டங்களில் இன்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #HimachalRains #Schoolsclosed
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குலு மற்றும் மனாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.



    பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #HimachalRains #Schoolsclosed
    ×