வாக்களிக்க போகும் முன் மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம்- நடிகர் பிரகாஷ்ராஜ்

பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார்.அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
வாக்களிக்க போகும் முன் மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம்- நடிகர் பிரகாஷ்ராஜ்
Published on

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார்.

அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

இந்நிலையில், பாதுகாப்பு காவலர்களைக்கொண்டு நீதிக்காக போராடிய சிங் சமூகத்தினர் மீது தடியடி நடத்திவிட்டு, தற்போது தேர்தல் சமயத்தில் உணவளிக்கும் மோடியை விமர்சித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

அதில், "வாக்களிக்க செல்லும் போது, மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம். ஜனநாயகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றுவோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com