என் மலர்
நீங்கள் தேடியது "TTD"
- திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் தலைமையிலான குழு அசாம் சென்றிருந்தது.
- கவுகாத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் பி.ஆர். நாயுடு தலைமையிலான குழு நேற்று அசாம் சென்று, அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, முதலமைச்சர் அலுவலகம் செய்து வெளியிட்டுள்ளது.
- வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
- பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாக கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
- 18 ஊழியர்களை தேவஸ்தானம் இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி நிர்வாக அதிகாரியான ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்குச் சென்று ராஜசேகர் பாபு பிரார்த்தனை செய்யும் வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாக கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக, இதே போன்ற காரணங்களுக்காக ஆசிரியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட குறைந்தது 18 ஊழியர்களை தேவஸ்தானம் இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோவில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கான பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்க திட்டம்.
- பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தான போர்டு திட்டம்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரேணிகுண்டா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் (Sri Venkateswara International Airport) எனப் பெயர் மாற்ற என திருப்பதி தேவஸ்தானம் போர்டு இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக அரசின் நில ஒதுக்கீடு நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் குமார சுவாமி, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு 100 மின்சார பேருந்துகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கோவில் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
- கார் டிரைவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
- விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
திருப்பதி மலையில் வேற்று மத பிரசாரம், தொழுகை, போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் வாடகைக்கு எடுத்து திருப்பதி வந்தனர்.
நேற்று காலை திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர் தரிசனத்திற்கு சென்றனர்.
அப்போது கார் டிரைவர் பாப விநாசம் சாலையில் உள்ள மண்டபத்தில் திடீரென தொழுகை செய்தார்.
இதனை அந்த வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கார் டிரைவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்ட டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
திருப்பதி மலையில் தொழுகை செய்ய தடை உள்ளது தனக்கு தெரியாது. இதனால் தொழுகை நடத்தியதாக கார் டிரைவர் தெரிவித்தார்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து டிரைவரை அனுப்பி வைத்தனர். டிராவல்ஸ் உரிமையாளர்கள் திருப்பதிக்கு கார் ஓட்டி வரும் டிரைவர்கள் தொழுகை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர்.
- குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
- அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.
2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.
- மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
- டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.
தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- முன்பதிவு செய்த நாளில் ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 31-ந்தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடவில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.
ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போனது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் 'சர்வர்' பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளை திருமலையில் கோகார்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 8.30 மணிக்கு உற்சவர் ஏழுமலையான் கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேல தாளம், மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு பகல் 11 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பதியில் நேற்று 57, 104 பேர் தரிசனம் செய்தனர். 32 351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- 10 மணியளவில் டிக்கெட்டுகள் வெளியீடு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
- இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
- நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






