என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » former nepalese pm
நீங்கள் தேடியது "Former Nepalese PM"
நேபாளம் நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #FormerNepalesepm #TulsiGiri
காத்மாண்டு:
இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார்.
பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேபாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலக்கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, புத்தானில்கன்ட்டா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் 93-வது வயதில் இன்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #FormerNepalesepm #TulsiGiri
இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார்.
பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேபாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலக்கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்தார்.
பின்னர், மன்னர் கியானேந்திர ஷா ஆட்சிக்காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்கு திரும்பினார். அப்போது, பிரதமர் பதவிக்கு நிகராக கருதப்படும் நேபாள மந்திரிசபையின் துணை தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, புத்தானில்கன்ட்டா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் 93-வது வயதில் இன்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #FormerNepalesepm #TulsiGiri
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X