என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Court"

    • திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சேதராப்பட்டு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2014-ம் ஆண்டு ஏ.எப்.டி.மில் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் என்பவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

    இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று நீதிபதி சேரலாதன் அளித்த உத்தரவில், பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்களிப்பதாக உத்தரவிட்டார்.

    • ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
    • புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
    • வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.

    சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    வில்லியனூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்த காதல் ஜோடி இன்று புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான தினேஷ்குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு அபிராமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தனது காதலன் தினேஷ்குமாருடன் சென்று கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் அபிராமி தனது காதல் கணவர் தினேஷ்குமாருடன் இன்று காலை புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே அபிராமியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானதாக போலீசில் புகார் தெரிவித்து இருந்ததால் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×