search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother murder"

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.

    வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.

    நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.

    வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.

    பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
    • வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.

    சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).

    இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது மகன் பாபு, அவரை அங்கிருந்து மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்தார். தனது தாய், அறையில் இருந்த மரக்கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக போலீசில் பாபு தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொன்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுமித்ராவை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்களது வீட்டில் சுமித்ராவின் மகளுடன் முருகன்(42) என்பவர் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்த விவகாரம் தெரியவந்தது.

    திருவண்ணாமலையை சேர்ந்த அவருக்கு, வளைகுடா நாட்டில் டிரைவராக வேலை பார்த்த போது அங்கிருந்த இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கேரளாவுக்கு திரும்பிவந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகன், இந்திராவின் குழந்தைகள், சகோதரர் பாபு மற்றும் தாய் சுமித்ரா ஆகியோருடன் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தி ருக்கிறார்.

    இதனால் அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும், சுமித்ரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    இருந்தபோதிலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சுமித்ராவை கொன்றதை ஒப்புக்கொண்டார். மகள் இந்திராவுடன் லிவ்-இன் பார்ட்னராக முருகன் வாழ்வது சுமித்ராவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் சுமித்ரா மற்றும் முருகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது.

    இதனால் சுமித்ராவை கொல்ல முருகன் திட்டமிட்டார். சுமித்ராவின் மகன் பாபு இல்லாத நேரத்தில் அவரை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாபு வெளியே சென்றிருந்த நேரத்தில், சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்பு சுமித்ரா தவறி விழுந்து காயமடைந்தது போன்று செட்-அப் செய்துவிட்டு, சென்றிருக்கிறார்.

    சுமித்ராவின் சாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாதது போன்று வழக்கம்போல் நடமாடிய படி இருந்திருக்கிறார். ஆனால் போலீசார் நடத்திய துரித விசாரணை காரணமாக முருகன் சிக்கிக்கொண்டார். கைது செயயப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
    • வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.

    சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
    • தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.

    பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.

    சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
    • கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது‌. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. 4 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

    அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார்.

    நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன் பாளையம் அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் டானா புதூரில் உள்ள மின்வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். மகள் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.

    பின்னர் அவர் வீட்டிலிருந்து தினமும் சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார். தொடர்ந்து யுவராணி மகனை நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இது அவரது மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்விலும் யுவராணியின் மகன் சரியாக மார்க் எடுக்கவில்லை. இதை அடுத்து யுவராணி தனது மகனிடம் தந்தையிடம் கூறி மீண்டும் உன்னை பள்ளியில் உள்ள விடுதியில் சேர்க்கப்போகிறேன் என்று கூறி வந்தார். இதனால் யுவராணி மீது அவரது மகனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.

    நேற்று யுவராணியின் கணவர் அருள்செல்வன் வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் யுவராணி தனது மகன், மகளுடன் இருந்தார். இரவு 8.30 மணி அளவில் யுவராணி தனது மகனிடம் நாளை காலை உனது தந்தையிடம் சொல்லிவிட்டு உன்னை பள்ளி விடுதிக்கு அழைத்து செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் அவரது மகன் யுவராணியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கினர். யுவராணி தனது மகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கினார். அவரது மகன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.

    தாய் மீது கோபத்தில் இருந்த மகன் விடிந்ததும் தன்னை மீண்டும் பள்ளி விடுதியில் சேர்த்து விடுவார்கள் என ஆத்திரம் அடைந்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் நள்ளிரவு 12 மணி அளவில் எழுந்து தாய் படுத்திருந்த ஹாலுக்கு சென்றார்.

    அப்போது யுவராணி படுத்திருந்த இடத்தின் அருகே ஹலோ பிளாக் கல் மேல் ஒரு பூந்தொட்டி இருந்தது. ஆத்திரமடைந்த அவரது மகன் பூந்தொட்டியை எடுத்து முதலில் யுவராணி தலையில் அடித்துள்ளார். எனினும் ஆத்திரம் அடங்காததால் அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி தலையில் அடித்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த யுவராணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே படுத்திருந்த அவரது மகள் எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது யுவராணியின் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது யுவராணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

    பின்னர் யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே யுவராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சந்திரசேகர், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் யுவராணி வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய யுவராணியின் மகன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு அருகே தாயை பெட்ரோல் உற்றி எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).

    வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

    எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    தாயை கொன்றுவிட்டு தப்பிய அதிமுக முன்னாள் எம்பியின் மகனை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63).

    கணவர் மறைவுக்கு பிறகு சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார். இவரது மகன் பிரவீன் வெளிநாட்டில் படித்து முடித்து விட்டு சென்னை வந்திருந்தார்.

    கடந்த சில நாட்களாக தாயுக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது தாயை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதனால் பயந்து போன ரத்தினம் திருப்பூரில் உள்ள மகள் சுதாவுக்கு போன் செய்து பிரவீன் தன்னை மிரட்டியது குறித்து கூறியுள்ளார்.

    இதற்கிடையே வீட்டில் ரத்தினம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    சாஸ்திரிநகர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சொத்து தகராறில் ரத்தினத்தை மகன் பிரவீன் தான் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    அவரது செல்போன் ’சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பிரவீன் சென்னையில் பதுங்கி இருக்கிறாரா? வேறு எங்கும் தப்பி ஓடி விட்டாரா? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீஸ் பிடியில் பிரவீன் சிக்கினால் தான் இந்த கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.

    பிரவீனை பற்றிய தகவல்களை போலீசார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேகரித்து வருகிறார்கள். மகன் தப்பி ஓடியதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    பாலவாக்கத்தில் சொத்து தகராறில் தாயை குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Murder

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணி அம்மாள் (64). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில், ராணி அம்மாள் தனக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இதையடுத்து ராணி அம்மாளின் 3-வது மகன் பர்ணபாஸ் தாயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்டோ ஓட்டிவரும் இவர், தாயிடம் உள்ள வீடு, நிலம் ஆகியவற்றை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனால், ராணி அம்மாள் அதை ஏற்கவில்லை. தன்னை ஆதரித்து காப்பாற்றும் குழந்தைகளுக்குத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தாய்க்கும்- மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்று இரவு பர்ணபாஸ் ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது ராணி அம்மாள் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பர்ணபாஸ் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த நகை, கம்மல் ஆகியவற்றை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தார். அவை ரத்தக்கறையுடன் இருந்ததால் பர்ணபாஸ் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே, சொத்து கொடுக்காத ஆத்திரத்தில் தனது தாயை பர்ணபாஸ் கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாலவாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து, தப்பி ஓடமுயன்ற பர்ணபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலைக்கு வேறு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×