search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boyfriend arrest"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
    • போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.

    பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.

    இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார்.

    போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார்.
    • இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரை சேர்ந்தவர் நர்கிஸ் (வயது 25). கல்லூரி மாணவியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரான இர்பான் (வயது 28)என்பவரும் வந்துள்ளார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இர்பான் இரும்பு கம்பியால் நர்கிசை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இர்பானை கைது செய்தனர்.

    விசாரணையில் அவரும், நர்கிசும் காதலித்து வந்தது தெரியவந்தது. இர்பான் ஒரு தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நர்கிசை திருமணம் செய்து வைக்க நர்கிசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் நர்கிஸ் இர்பானுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இது இர்பானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே தனக்கு கிடைக்காத நர்கிசை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் அறிந்து வைத்தார்.

    மேலும் நர்கிஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நேற்று பூங்காவில் நர்கிசுடன் வாக்குவாதம் செய்ததும், அப்போது இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர்.
    • கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி.

    இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். மாணவியை தனிமையில் அழைத்துச் சென்ற வாலிபர் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வாலிபர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் 2 பேருக்கு அனுப்பி வைத்தார்.

    வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர். தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார்.

    தங்களுடன் உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்தால் காதலனோடு தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மாணவியை மிரட்டினர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.

    அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர்.

    அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

    இதனால் விரக்தி அடைந்த மாணவி இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார்.

    அவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்த குணசேகரன் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் தேவி.

    வேலூரை சேர்ந்த தேவி, கடந்த ஜனவரி மாதம் பொன்னம்பலம் என்பவர் மூலம் குணசேகரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந்தேதி தேவியை பார்ப்பதற்காக வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவரை தனது கணவர் என்று குணசேகரிடம் தேவி தெரிவித்தார். இதையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். வீட்டு வேலையையும், மாடுகளை பராமரிப்பதையும் அவர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி இருவரும் திடீர் என்று மாயமானார்கள். கணவன்- மனைவி என்பதால் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்று குணசேகரன் கருதினார். எனவே இதுபற்றி போலீசில் புகார் செய்யவில்லை.

    இந்த நிலையில் இருவரும் தங்கியிருந்த வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலையூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில தினங்களுக்கு முன்பு மாயமான தேவி கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், தேவியுடன் தங்கிய வாலிபர்தான், இந்த பெண்ணை கொலை செய்து பிணத்தை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. தேவியுடன் தங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதில் தேவியை கொலை செய்த வாலிபர் அவருடைய காதலர் என்று தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்குன்றம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    செங்குன்றம் அருகே உள்ள ஆரிக்கம்பட்டை சேர்ந்தவர் ஜெயபால். பூ வியாபாரி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஜெயபால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக சுற்றி வந்தார். இந்த நிலையில் ஜெயபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.

    இதனை அறிந்த இளம்பெண், அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஜெயபால் இளம்பெண்ணை திட்டி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருச்சி:

    கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த இவருக்கும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த வெற்றிவேலுக்கும் (24) இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

    இதனை அறிந்த வெற்றிவேலின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருந்தனர். அதன்படி இன்று சுவாமிமலையில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் காதலன் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் செந்தமிழ் செல்வி, தான் தங்கிருந்த காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செந்தமிழ்செல்வி தற்கொலைக்கு காரணமான வெற்றிவேல், அவரின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லப்பன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து போலீசார் ஆபாசமாக பேசுதல், தற்கொலைக்கு தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து அறிந்த 3 பேரும் தலைமறைவாகினர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதில் வெற்றிவேல் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூரில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில், செந்தமிழ் செல்வியை நான் காதலிக்கவில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர் செய்து அவரை லால்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் செந்தமிழ்செல்வியுடனும், அவரது தந்தையுடனும் பேசிய 15 நிமிட ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது.

    அதில் செந்தமிழ் செல்வியின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும், வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருவரும் பேசிக்கொண்டனர். இந்த பேச்சு தொடரும் போதே செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் இணைப்பை துண்டித்துவிடுகிறார். பின்னர் இருவரும் திருமணம் குறித்து பேசிவிட்டு இணைப்பை துண்டிக்கின்றனர்.

    இது கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய உரையாடலாக இருக்கலாம் என்றும், வெற்றிவேலின் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளாததை அறிந்த செந்தமிழ் செல்வி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    தற்கொலை செய்த செந்தமிழ் செல்வி தங்கியிருந்த வீட்டில் அவரால் எழுதப்பட்ட டைரி ஒன்றையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இருவரின் காதல் குறித்த தகவல்களும், காதல் தோல்வியால் அவர் எழுதிய வாசகங்களும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் டைரியில் ‘தனது சாவிற்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’ அதனால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்ததாக கூறுகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சிறைத்துறையில் பணியாற்றி வருவதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூர் கல்லூரி மாணவி தற்கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகள் ஷாலினி (வயது 18). இவர் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஷாலினியும், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்த நகை அடகுகடை வியாபாரி பூபதி மகன் அருண் (20) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஷாலினியிடம் பேசுவதை காதலன் அருண் தவிர்த்தார். மனமுடைந்த ஷாலினி கடந்த 3-ந் தேதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதையறிந்த காதலன் தலைமறைவாகிவிட்டார். ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை தேடி வந்தனர்.

    26 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்றிரவு காதலன் அருண் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பாரை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சதீஷ் (20). இவருக்கும், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது.

    அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பின்னர் மாணவியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்-அப் வீடியோ அந்தபகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு பரவியது. இந்த நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ பற்றிய தகவல் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் சிறையில் சதீஷ் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரம்பலூர் அருகே திருமணம் செய்ய மறுத்த ஆசிரியையை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷேட்டு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மகள் கமருன்நிஷா (வயது 27). இவர் குன்னம் அருகே இலந்தங்குழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை பெரம்பலூரில் இருந்து அல்லிநகரம் வரை பஸ்சில் செல்லும் அவர், அங்கிருந்து பள்ளிக்கு மொபட்டில் செல்வார்.

    அது போல் இன்று காலை அவர் அல்லிநகரத்திற்கு பஸ்சில் சென்று இறங்கியதும் அங்கிருந்து மொபட்டில் பள்ளிக்கு புறப்பட்டார். அல்லிநகரம்-இலந்தக்குழி இடையே உள்ள ஓடை பாலம் பகுதியில் செல்லும் போது அங்கு மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் கமருன் நிஷாவை வழிமறித்ததோடு அவருடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமருன் நிஷாவை சரமாரி குத்தினர். கழுத்தையும் அறுத்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனிடையே கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற மர்ம நபர்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மடக்கி பிடித்தனர். இதில் ஒருவன் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பியோடி விட்டான்.

    இதையடுத்து காயமடைந்து உயிருக்கு போராடிய கமருன் நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நானும் கமருன்நிஷாவும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தேன். ஆனால் இடையில் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். என்னை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். மேலும் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கமருன்நிஷாவை கொலை செய்ய எனது நண்பன் அப்பார்க்குடன் சேர்ந்து திட்டமிட்டேன்.

    அதன்படி இன்று காலை கமருன்நிஷா பள்ளிக்கு செல்லும் போது அவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன் என்றார். கைதான ஆனந்த் தச்சு வேலை செய்து வருகிறார். தப்பியோடிய அவரது நண்பர் அப்பார்க்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமணம் செய்ய மறுத்த ஆசிரியையை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print