search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student murder"

    • இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார்.
    • இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரை சேர்ந்தவர் நர்கிஸ் (வயது 25). கல்லூரி மாணவியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரான இர்பான் (வயது 28)என்பவரும் வந்துள்ளார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இர்பான் இரும்பு கம்பியால் நர்கிசை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இர்பானை கைது செய்தனர்.

    விசாரணையில் அவரும், நர்கிசும் காதலித்து வந்தது தெரியவந்தது. இர்பான் ஒரு தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நர்கிசை திருமணம் செய்து வைக்க நர்கிசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் நர்கிஸ் இர்பானுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இது இர்பானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே தனக்கு கிடைக்காத நர்கிசை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் அறிந்து வைத்தார்.

    மேலும் நர்கிஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நேற்று பூங்காவில் நர்கிசுடன் வாக்குவாதம் செய்ததும், அப்போது இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்தவர் சங்கீதா.

    இவர் கிளிமானூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி சென்றனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓடி செல்வதை கண்டனர். மேலும் வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

    அந்த வாலிபர் தான் சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த வாலிபர் யார்? எதற்காக அவர் சங்கீதாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.
    • நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரெயில்வே கோடுர் பகுதியை சேர்ந்தவர் அரி நாராயணா. இவரது மகன் நவதித் (வயது 18).

    இவர் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.

    அப்போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நவதித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாகம் இது குறித்து விடுதி வார்டன் காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி தினத்தன்று பாலு நவீனை நைசாக பேசி மது குடிக்க அழைத்தார்.
    • இருவரும் விஜயநகரம் டவுன் அருகே ஒன் டவுன் அடுத்துள்ள துவாரபடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே இருந்து மது குடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள கே.எல்.புரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது19). அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலு (25). இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாக நெருங்கி பழகி வந்தனர்.

    பாலு அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

    அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு நவீன் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவர் பாலியல் மற்றும் காதல் தொல்லை கொடுக்கும் விதமாக சில தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் இளம்பெண் வெறுப்படைந்தார். இது குறித்து தனது காதலன் பாலுவிடம் தெரிவித்தார். அவர் நவீனை கண்டித்தார். ஆனால் நவீன், இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லை.

    தொடர்ந்து வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் படங்கள் மற்றும் தகவல் அனுப்பினார். இதனால் மனமுடைந்த இளம்பெண் இது குறித்து மீண்டும் பாலுவிடம் கூறினார். ஆத்திரமடைந்த பாலு நவீனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    தீபாவளி தினத்தன்று பாலு நவீனை நைசாக பேசி மது குடிக்க அழைத்தார். இருவரும் விஜயநகரம் டவுன் அருகே ஒன் டவுன் அடுத்துள்ள துவாரபடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே இருந்து மது குடித்தனர்.

    அப்போது பாலு தனது காதலியை துன்புறுத்துவதாக நவீனுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு நவீனை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பின்னர் பாலு எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து புறப்பட்டு வந்தார். இதற்கு இடையே நவீன் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் விஜயநகரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நவீனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாலு கொலை செய்யப்பட்ட நவீனின் நண்பர்கள் சிலருக்கு போன் செய்து நவீன் ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    நவீன் குடும்பத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் உடலை பார்வையிட்டனர். உடலில் இருந்த காயங்களை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலு தலைமறைவாகிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பாலுவை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது காதலிக்கு நவீன் தொடர்ந்து வாட்ஸப் மூலம் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததால் அடித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். போலீசார் பாலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சத்யபிரியாவின் தாயான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி புற்று நோயால் அவதிப்பட்டு வரும் உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.
    • ராமலட்சுமியின் உடல் நிலை சரியாகாத காரணத்தால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

    மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது தந்தை மாணிக்கம் அதிர்ச்சியில் தற்கொலை செய்துக் கொண்டார்.

    ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கத்தின் உடற் கூறாய்வு சென்னை மருத்துவமனையில் தொடங்கியது. இதன் முதற்கட்ட விசாரணையில் அவர் மதுவில் மயில் துத்தம் என்கிற வேதிப்பொருளை கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

    மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது அவரது குடும்பத்தின் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்து போயிருக்கிறார்கள்.

    இதற்கிடையே மாணவி சத்யபிரியாவின் தாயான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி புற்று நோயால் அவதிப்பட்டு வரும் உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.

    மகள் கொடூரமாக ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்ததை எண்ணி கண்ணீர் மல்க தவித்து வருகிறார்.

    ராமலட்சுமியின் உடல் நிலை சரியாகாத காரணத்தால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அங்கு தங்கி இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர். இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாணவியின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

    மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.

    மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி.

    இவரது மகன் முரளிதரன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி(24) என்பவருக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. டிப்ளமோ படித்துள்ள பாலாஜி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் நவின்பிரபு, பிரசாத் ஆகியோர் கெம்பட்டிகாலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு வந்த பாலாஜிக்கும், முரளிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிதரனின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

    ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த முரளிதரனை நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய பாலாஜியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான பாலாஜியும் பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாலாஜியுடன் பழகுவதை மாணவி நிறுத்தி விட்டார். அதன்பிறகு முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பேசி பழகி வந்துள்ளார். கடந்த 23-ந்தேதி மாணவியின் பிறந்த நாளையொட்டி அந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீடு அருகே சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வரலாம்? என கூறி தகராறு செய்துள்ளனர். கும்பலில் இருந்த பாலாஜி, நான் காதலித்த பெண்ணுடன் நீங்கள் எப்படி பேசலாம்? என கூறி இருவரையும் கண்டித்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக முரளிதரன் தப்பி சென்றார்.

    இச்சம்பவத்தில் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் விரோதம் உருவாகியது. நேற்று இரவு வேலை முடிந்து பாலாஜி வீட்டுக்கு நடந்து சென்ற போது அவரை முரளிதரனும், நண்பர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசமடைந்து அவர் முரளிதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    பாலாஜி கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கும்பகோணம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.

    பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் முன்தசீரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அந்த அழைப்பு எங்கிருந்து பேசப்பட்டது என்று செல்போன் டவரை வைத்து போலீசார் ஆய்வு செய்து முன்தசீரை தேடி வந்தனர்.


    இந்த நிலையில் இன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முன்தசீரின் உடலை பார்வையிட்டனர். கொலையாளிகள் பற்றிய தடயங்கள் கிடக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

    முன்தசீரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன்தசீரின் நண்பர்களிடமும் அவருக்கு யாரேனும் விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder

    ×